Date:

சீன நாணய மாற்று ஒப்பந்தம் நீட்டிப்பு

 

இலங்கை மத்திய வங்கிக்கும், சீன மக்கள் வங்கிக்கும் இடையில் 2021 ஆம் ஆண்டு கையொப்பமிடப்பட்ட இருதரப்பு நாணய பரிமாற்ற ஒப்பந்தம் மேலும் 3 ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, அசல் ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ள விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளுக்கு உட்பட்டு, 2024 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் ஒப்பந்தம் வெற்றிகரமாக நீட்டிக்கப்பட்டதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.

இந்த ஒப்பந்தம் 10 பில்லியன் சீன யுவான் (சுமார் 1.4 பில்லியன் அமெரிக்க டொலர்கள்) நாணய மாற்று வசதி மூலம் சீனாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான நிதி ஒத்துழைப்பை தற்போதைய ஒப்பந்தம் பிரதிபலிக்கிறது.

இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி பி.நந்தலால் வீரசிங்க, இலங்கை மத்திய வங்கியின் சார்பாக இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார்.

மேலும், சீன மக்கள் வங்கி சார்பில் அதன் ஆளுநர் பென் கோன்ஷெங், அதில் கையெழுத்திட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

வாகன கடன்களுக்கான விதிமுறைகளில் மாற்றம்

நாட்டில் உரிமம் பெற்ற வணிக வங்கிகள், உரிமம் பெற்ற நிதி நிறுவனங்கள்...

இலங்கை வரலாற்றில் 47 கோடி ரூபாய் லொட்டரி; அதிஸ்டசாலியான நபர்!

இலங்கை வரலாற்றில் மிகப்பெரிய லொட்டரி பரிசு தொகையை வென்றவருக்கு 47 கோடி...

Breaking தெஹிவளை புகையிரத நிலையத்திற்கு அருகில் துப்பாக்கிச் சூடு

தெஹிவளை புகையிரத நிலையத்திற்கு அருகில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. மோட்டார் சைக்கிளில் பிரவேசித்த...

அமெரிக்க அதிபர் டிரம்பிற்கு அரியவகை நோய்; வெளியான அதிர்ச்சித் தகவல்

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், அரியவகை நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. டிரம்பிற்கு...