Date:

கொழும்பு – அவிசாவளை வீதியில் போக்குவரத்து மட்டுப்பாடு

கொழும்பு அவிசாவளை வீதியின் போக்குவரத்து மட்டுப்படுத்தல் தொடர்பில் பொலிஸார் விசேட அறிவித்தல் ஒன்றை விடுத்துள்ளனர்.

ஹங்வெல்ல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட எம்புல்கம ரஜமகா விகாரையில் இடம்பெற்று வரும் ஸ்ரீ சம்புத்த ஜயந்தி ஆசீர்வாத வருடாந்த மஹா பெரஹெர ஊர்வலம் செல்லவுள்ளதால் குறித்த வீதியில் இன்றும் நாளையும் போக்குவரத்து மட்டுப்படுத்தப்படும் என பொலிஸார் விடுத்துள்ள அறிவித்தலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு – அவிசாவளை மார்க்கத்தில் பயணிக்கும் சாரதிகள் மாற்று வழிகளைப் பயன்படுத்துமாறு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கொழும்பிலிருந்து அவிசாவளை நோக்கி பயணிக்கும் சாரதிகள், ரணால மக்கட சந்தியில் கெகுலங்வல வீதி ஊடாக பனாகொட 293 வீதியின் பனாகொட சந்தி வழியாக கொடகம சென்று, அங்கிருந்து ஹைலெவல் வீதி ஊடாக அவிசாவளை நோக்கி பயணிக்கலாம்.

அவிசாவளையில் இருந்து கொழும்பு நோக்கி பயணிக்கும் வாகனங்கள் ஹைலெவல் வீதியைப் பயன்படுத்தலாம்.

293 பனாகொட, ஹோமாக வீதியில் பயணிக்கும் வாகனங்கள் கெகுலங்வல வீதியின் மங்கட சந்தியில் அவிசாவளை – கொழும்பு (Low Level) பழைய வீதிக்கு பிரவேசிக்கலாம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

எரிபொருள் விலைகளில் திருத்தம்

மாதாந்த எரிபொருள் விலைச் சூத்திரத்திற்கு அமைய, இன்று (31) நள்ளிரவு 12.00...

அமைச்சரானார் மொஹமட் அசாருதீன்!

இந்தியாவின் முன்னாள் கிரிக்கெட் தலைவரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான...

STC முன்னாள் தலைவர் கைது

இலங்கை அரச வர்த்தக (பொது) கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் ஹுஸைன் அஹமட்...

ரணிலுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிராக, உத்தியோகபூர்வ சுற்றுப்பயணம் என்ற போலிக்காரணத்தின்...