Date:

ஹட்டன் சாரதிக்கு விளக்கமறியல் நீடிப்பு

விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த ஹட்டன் தனியார் பஸ் விபத்து சாரதியை ஹட்டன் நீதவான் நீதிமன்றில் வியாழக்கிழமை (26) மீண்டும் முன்னிலைப்படுத்திய போது, ​​சந்தேகத்திற்குரிய சாரதியை 01.07.2025 வரை விளக்கமறியலில் வைக்குமாறு ஹட்டன் நீதவான் எம்.பாரூக்தீன் உத்தரவிட்டார்.

விபத்து தொடர்பில் நுவரெலியா மாவட்ட பிரதான மோட்டார் வாகனப் பரிசோதகரும் ஹட்டன் பொலிஸாரும் நீதிமன்றத்தில் வியாழக்கிழமை (26) உண்மைகளை முன்வைத்து சந்தேக நபர்களை அடுத்த மாதம் 07 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவானிடம் கோரினர்.

ஹட்டன் பொலிஸார் நீதிமன்றில் முன்வைத்த உண்மைகளை கருத்திற்கொண்ட நீதவான் சந்தேக நபரின் விளக்கமறியலை  நீடித்து உத்தரவிட்டார்.

நாவலப்பிட்டி, நவ திஸ்பனையில் வசிக்கும் மூன்று பிள்ளைகளின் தந்தையான 46 வயதுடைய பிரஷாசன்ன பண்டார என்பவரின் விளக்கமறியலே நீடிக்கப்பட்டுள்ளது.

ஹட்டனிலிருந்து கண்டி நோக்கி கடந்த 21ஆம் திகதி பயணித்த தனியார் பேருந்து, ஹட்டன் கொழும்பு பிரதான வீதியில் ஹட்டன் மல்லியப்பு பகுதியில் வீதியை விட்டு விலகி தேயிலை தோட்டத்திற்குள் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் மூவர் மரணமடைந்தனர். 51 பேர் காயமடைந்து, டிக்கோயா-கிளங்கன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். எட்டுப்பேர், கண்டி போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டனர். 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

வரவு செலவுத் திட்டம் பெரும்பான்மை வாக்குகளுடன் நிறைவேற்றம்

2026 ஆம் ஆண்டுக்கான தேசிய மக்கள் சக்தி முன்வைத்துள்ள வரவு செலவு...

இஸ்ரேலில் இலங்கையர் இறந்து விட்டதாக அறிவிப்பு

இஸ்ரேலில் இலங்கையர் ஒருவர் வியாழக்கிழமை (13) இரவு இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இஸ்ரேலுக்கான இலங்கை...

கொட்டாஞ்சேனை துப்பாக்கிச் சூடு – மேலும் இருவர் கைது

அண்மையில் கொட்டாஞ்சேனையில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்திற்கு உதவிய குற்றச்சாட்டில் மேலும் ஆண்...

இலங்கைக்கு கிழக்கே கீழ் வளிமண்டலத்தில் குழப்பமான நிலை

இலங்கைக்குக் கிழக்கே கீழ் வளிமண்டலத்தில் குழப்பமான நிலை உருவாகி வருவதாக வளிமண்டலவியல்...