Date:

கிரிந்திவெல பகுதியில் நபரொருவர் கொலை

கிரிந்திவெல – வல்கம்முல்ல பகுதியில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு நபர் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார்.

நேற்று (21) மாலை இந்த கொலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

திம்பிரிகம, கிரிந்திவெல பிரதேசத்தை சேர்ந்த 42 வயதுடைய நபரே உயிரிழந்துள்ளார்.

கொலை செய்யப்பட்ட நபர் குத்தகை அடிப்படையில் கொள்வனவு செய்திருந்த காணியில் இருந்த காவலாளி ஒருவரே இக்கொலையை செய்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

சந்தேக நபர் கொலையை செய்துவிட்டு இறந்தவரின் மோட்டார் சைக்கிளுடன் தப்பிச் சென்றுள்ளார்.

கொலைக்கான காரணம் இதுவரையில் வெளியாகவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சந்தேக நபரை கைது செய்வதற்கான மேலதிக விசாரணைகளை கிரிந்திவெல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

மாகாண சபை தேர்தலை நடத்த முடியும் – அரசாங்கம்

நாடாளுமன்றில் அங்கம் வகிக்கும் அனைத்து தரப்பினர்களும் ஒருமித்த நிலைப்பாட்டிற்கு வந்தால் விரைவில்...

தீவிரமாகும் தொழிற்சங்க நடவடிக்கை! மின்சார சபை தொழிற்சங்கங்கள் எச்சரிக்கை

இலங்கை மின்சார சபையை நான்கு பகுதிகளாகப் பிரிப்பதற்கு எதிரான சட்டப்படி வேலை...

சந்தையில் கீரி சம்பா அரிசிக்கு பற்றாக்குறை

சந்தையில் கீரி சம்பா அரிசிக்கு பற்றாக்குறை நிலவுவதாக நுகர்வோர் விசனம் தெரிவிக்கின்றனர். அரிசி...

சீகிரிய கண்ணாடி சுவற்றில் கிறுக்கிய இளம் பெண் கைது

சீகிரியாவில் உள்ள பளிங்குச் சுவரில் தனது பெயரை எழுதியதற்காக 21 வயதுடைய...