Date:

‘கலாநிதி’ பட்டம் தொடர்பில் மூவரிடம் CID வாக்குமூலம்

பாராளுமன்ற இணையத்தளத்தில் நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் ஹர்ஷன நாணயக்காரவின் பெயருக்கு முன்னால் கலாநிதி என்று எழுதப்பட்ட சம்பவம் தொடர்பில் குற்றப் புலனாய்வு திணைக்களம் பாராளுமன்ற அதிகாரிகளிடம் வாக்குமூலம் பதிவு செய்துள்ளது.

குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் குழுவொன்று நேற்று (20) பாராளுமன்றத்திற்கு விஜயம் செய்து பாராளுமன்றத்தின் உதவி செயலாளர் நாயகம் உட்பட மூன்று அதிகாரிகளின் வாக்குமூலங்களை பதிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தான் பெற்றிராத ‘கலாநிதி’ பட்டத்தை பாராளுமன்ற இணையத்தளத்தில் தனது பெயருக்கு முன்னால் தவறாக குறிப்பிட்டமை தொடர்பில் அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார அண்மையில் குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடு செய்திருந்தார்.

இதன்படி, சம்பவம் தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்த குற்றப் புலனாய்வுப் பிரிவினர், நாடாளுமன்ற அதிகாரிகள் குழுவிடம் நேற்று வாக்குமூலங்களைப் பதிவு செய்ய நடவடிக்கை எடுத்துள்ளனர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

காலி நகர மத்தி கனமழையால் நீரில் மூழ்கியது…!

காலியில் தற்போது பெய்து வரும் கனமழையின் காரணமாக, காலி நகரப் பகுதி...

மண்சரிவு சிவப்பு எச்சரிக்கை நீடிப்பு

கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களின் சில பகுதிகளுக்கு விடுக்கப்பட்டிருந்த மண்சரிவு அபாய...

ஜனாதிபதியின் அதிரடி பணிப்புரை

அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரண நிதிகளை, எதிர்வரும் டிசம்பர் 31ஆம் திகதிக்கு...

பாறை சரிந்ததன் காரணமாக 6 குடும்பங்கள் வெளியேற்றம்

பாறை ஒன்று சரிந்து வந்ததன் காரணமாக, ஹல்துமுல்ல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மாலதோல...