Date:

ஜனாதிபதி நிதியத்தில் முறைகேடா?

ஜனாதிபதி நிதியத்தில் பணம் பெற்றவர்களின் மற்றுமொரு ஆவணம் எதிர்வரும் காலங்களில் வெளியிடப்படும் என அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

அமைச்சரவை ஊடகவியலாளர் மாநாட்டில் ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போதே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

2005 ஆம் ஆண்டு முதல் 2024 ஆம் ஆண்டு வரை அரசியல்வாதிகள் பெற்ற பணத்தை மாத்திரமே தாம் அண்மையில் பாராளுமன்றத்தில் முன்வைத்ததாக தெரிவித்தார்.

எவ்வாறாயினும் ஜனாதிபதி நிதியம் தவறாக பயன்படுத்தப்பட்டுள்ளதா? என்பது குறித்து ஆராயப்படும் எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

“1978 ஆம் ஆண்டின் ஜனாதிபதி நிதியச் சட்டம், 5 குறிப்பிட்ட வகைகளின் கீழ் பணம் வழங்குவதற்கான வாய்ப்பை வழங்கியுள்ளது.

அறிவு வளர்ச்சிக்கு உதவுதல், தேசிய முக்கியத்துவம் வாய்ந்த நபர்களுக்கு சில உதவிகளை வழங்குதல், வறுமைக்கு நிவாரணம் வழங்குதல் மற்றும் கடைசி பிரிவில் சபையால் முடிவெடுப்பவர்களுக்கு வழங்கப்படலாம்.

கடைசி பிரிவில் இருந்து தான் அந்த வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

இதய அறுவை சிகிச்சைக்கு அல்லது ஏதாவது சிகிச்சைக்கு பொதுவாக 1 1/2 இலட்சம் ரூபாய் பெறுவதற்கு எவ்வளவு கஷ்டப்பட வேண்டும் என்பது நம் நாட்டு மக்களுக்கு நன்கு அனுபவம் உள்ளது.

கேட்ட தொகை கிடைக்காது. கடிதங்களை நிரப்புவது மிகவும் சிரமமாக இருக்கும்.

2005 ஆம் ஆண்டு முதல் 2024 ஆம் ஆண்டு வரையிலான குறிப்பிட்ட காலப்பகுதியில் அரசியல்வாதிகள் பெற்ற பணத்தையே நான் முன்வைத்தேன்.

அதற்கு முன் சந்திரிகா குமாரதுங்கவின் காலத்திலும் இவ்வாறு எடுக்கப்பட்டுள்ளது.

நான் முன்வைத்த ஆவணங்களுக்கு மேலதிகமாக உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள், தவிசாளர்கள் மற்றும் மாகாண சபை அமைச்சர்கள் இவ்வாறு ஜனாதிபதி நிதியத்தில் இருந்து பணம் பெற்றுள்ளனர்.

இது உண்மையில் ஒரு தார்மீக பிரச்சினை. இந்த பணம் சிலருக்கு, 110,000,000 ரூபாய், தவணை முறையில் அல்ல, நேரடியாக வழங்கப்பட்டுள்ளது.

சாதாரண நபருக்கு 5 லட்சம் ரூபாய் கொடுத்தாலும் தவணை முறையிலே வழங்கப்படும்.

அதிகாரத்தை கையில் வைத்துக்கொண்டு பெரிய கரண்டியால் பங்கிட்டுக் கொண்டுள்ளனர்.

இது தொடர்பாக விசாரணைகள் நடத்தப்பட்டு வருகின்றன. இருப்பினும், மீதமுள்ள ஆவணம் எதிர்காலத்தில் சமர்ப்பிக்க திட்டமிடப்பட்டுள்ளது” என்றார்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

Breaking விபத்தில் இராணுவ சிப்பாய்கள் உட்பட 22 பேர்…

நிட்டம்புவ - கிரிந்திவெல வீதியில் திங்கட்கிழமை (21) காலை இடம்பெற்ற விபத்தில்...

பாப்பரசர் பிரான்சிஸ் இயற்கை எய்தினார்

கத்தோலிக்க திருச்சபையின் தலைவர் பாப்பரசர் பிரான்சிஸ் இயற்கை எய்தினார்.   88 வயதான பாப்பரசர்,...

Breaking News மைத்திரி சி.ஐ.டி.யில் முன்னிலை

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சற்றுமுன்னர் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையாகியுள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தின தாக்குதலுக்கு இன்றுடன் 6 ஆண்டுகள் நிறைவு

உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல் நடத்தப்பட்டு இன்றுடன் 6 ஆண்டுகள் நிறைவடைகிறது.   கடந்த...

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/newsswqr/public_html/wp-includes/functions.php on line 5373