Date:

‘40 பேரைக் காணவில்லை, 20,000 பேருக்கு வீடில்லை’

கிழக்கு கொங்கோ ஜனநாயகக் குடியரசில், எரிமலை வெடிப்பொன்றின் பின்னர் 40 பேரை இன்னும் காணவில்லையெனவும், 20,000க்கும் அதிகமானோர் வீடற்றவர்களாகியுள்ளதாக ஐக்கிய நாடுகள் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், எரிமலை வெடிப்பிலான சாம்பல் மண்டலத்தால் சுவாச நோய்கள் ஏற்படலாமென அறிக்கையொன்றில் மனிதாபிமான விவகாரங்களுக்கான ஒருங்கிணைப்புக்கான ஐக்கிய நாடுகளின் அலுவலகம் நேற்று தெரிவித்துள்ளது.

இதேவேளை, வீடுகளிலிருந்து வெளியேறிய மக்கள், மோட்டார் சைக்கிள்கள் உட்பட்ட பெறுமதி வாய்ந்த பொருள்களை இழந்ததாக குறித்த அலுவலகம் தெரிவித்துள்ளது.

இந்த எரிமலை வெடிப்பில் உயிரிழந்தோரின் எண்ணிக்கையானது 32ஆக நேற்று முன்தினம் உயர்ந்திர்ருந்தது.

இந்நிலையில், 200க்கும் மேற்பட்ட சிறிய, மத்தியதர புவியதிர்ச்சிகளால் கொங்கோ தலைநகர் கோமாவிலுள்ள கட்டடங்களில் வெடிப்புகள் ஏற்பட்டிருந்தது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

பொலிஸ் அதிகாரிகளுக்கு 7,000 ரூபா கொடுப்பனவு: அமைச்சரவை அனுமதி

பொலிஸ் அதிகாரிகளுக்காக 7,000 ரூபா கொடுப்பனவு வழங்குவதற்கு அமைச்சரவையின் அனுமதி கிடைத்துள்ளதாக...

கட்டாரில் இருந்து நேரடியாக தேசிய அணியில் இணைந்து கொள்ளும் வியாஸ் காந்த்

பாகிஸ்தானில் நடைபெறும் டி20 முத்தரப்பு தொடருக்கான இலங்கையின் தேசிய ஆடவர் அணியில்...

புதிய பெற்றோலிய குழாய் வழித்தடத்தை அமைக்க அமைச்சரவை அனுமதி

கொலன்னாவ முனையம் தொடக்கம் கொழும்பு துறைமுகம் வரைக்குமான குழாய் வழியில் பெற்றோலியப்...

பேருவளை கடலில் மிதந்து வந்த 200 கிலோ பொதிகள் மீட்பு

பேருவளை கடற்கரையில் இருந்து சுமார் இரண்டரை கடல் மைல் தொலைவில் கடலில்...