Date:

இம்தியாஸ் பாக்கிர் மாக்கார் மல்வத்து மற்றும் அஸ்கிரி பீட மகா நாயக்க தேரர்களை சந்தித்து கலந்துரையாடல்.

ஐக்கிய மக்கள் சக்தியின் புதிய தவிசாளராக நியமிக்கப்பட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் இம்தியாஸ் பாக்கீர் மாக்கார் இன்று(15) செவ்வாய்கிழமை மல்வத்து மற்றும் அஸ்கிரி பீடங்களின் மகா நாயக்க தேரர்களை சந்தித்து சமகால விவகாரங்கள் குறித்து கலந்துரையாடினார்.

முதலில் மல்வத்து மகா விகாரைக்கு விஜயம் செய்து, மல்வத்து பீட மகா நாயக்க சங்கைக்குரிய திப்பட்டுவாவே ஸ்ரீ சுமங்கல மகா நாயக்க தேரரை சந்தித்து கலந்துரையாடலில் ஈடுபட்டார்.

அதன் பின்னர் அஸ்கிரி மகா விகாரைக்கு விஜயம் செய்து அஸ்கிரி பீட மகாநாயக்க வரகாகொட ஸ்ரீ ஞானரதன தேரரை சந்தித்து கலந்துரையாடினார்.

 

இந்த சந்திப்புகளில் எதிர்க்கட்சியின் முன்னாள் பிரதம கொறடா லக்‌ஷ்மன் கிரியெல்ல, 2024 பொதுத் தேர்தலுக்கான ஐக்கிய மக்கள் சக்தியின் கண்டி மாவட்டத் தலைவர் திஸ்ஸ அத்தநாயக்க உள்ளிட்ட வேட்பாளர்கள் பலரும் கலந்து கொண்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா காலமானார் என்ற செய்தி தொடர்பான விளக்கம்

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க காலமானதாக தற்போது சமூக வலைதளங்களில் தகவல்கள்...

பல நீர்த்தேக்கங்களின் வான்கதவுகள் திறப்பு

தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக தெதுரு ஓயா நீர்த்தேக்கத்தின் 6...

பங்களாதேஷில் மீண்டும் போராட்டம்

பங்களாதேஷில் முகமது யூனுஸ் தலைமையில் இடைக்கால அரசாங்கம், நேற்று ஜூலை சாசனத்தில்...

தமிழ் மொழிப் பாடசாலைகளுக்கு விசேட விடுமுறை அறிவிப்பு

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, எதிர்வரும் செவ்வாய்க்கிழமை (21) மத்திய மற்றும் ஊவா...