நேற்று மேற்கொள்ளப்பட்ட மூன்றாவது சுற்று ஆர்.டி-பி.சி.ஆர் சோதனையின்போது இலங்கையின் வேகப்பந்துவீச்சாளர் ஷிரான் பெர்ணான்டோவுக்கு கொவிட்-19 தொற்று இல்லையெனக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பங்களாதேஷின் அணி அதிகாரியொருவரான ரபீட் இமாம் உறுதிப்படுத்தியுள்ளார்.
எவ்வாறெனினும், நேற்று பிற்பகல் நடைபெற்ற பயிற்சியில் ஷிரான் பெர்ணான்டோ கலந்து கொண்டிருக்கவில்லை.
பங்களாதேஷுக்கெதிரான முதலாவது ஒருநாள் சர்வதேசப் போட்டிக்கு முன்பதாக, ஷிரான் பெர்ணான்டோக்கு கொவிட்-19 தொற்று இருப்பதாகக் கண்டுபிடிக்கப்பட்டிருந்தது.