புதிய ஜனாதிபதியாக நியமனம் பெற்றதன் பின்னர் நாட்டின் பாதுகாப்பு படைகளின் பிரதானிகள் சம்பிரதாயபூர்வமாக நேற்று (04) ஜனாதிபதி அலுவலகத்தில் முப்படைத்தளபதி ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவை சந்தித்து கலந்துரையாடினர்.
அதன்படி பாதுகாப்பு பதவிநிலை பிரதானி ஜெனரல் ஷவேந்திர சில்வா, இராணுவதளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும்லியனகே, விமானப்படைத்தளபதி எயார்மார்ஷல் உதேனி ராஜபக்ஷ மற்றும் கடற்படைத்தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேரா ஆகியோர் ஜனாதிபதியை சந்தித்து சினேகபூர்வமாக கலந்துரையாடினர்.
இதன்போது நினைவுச்சின்னங்களும் பரிமாறிக்கொள்ளப்பட்டன