அரசாங்க தகவல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகமாக எச்.எஸ்.கே.பண்டாரவை நியமிக்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
அரசாங்க தகவல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகமாக கடமையாற்றிய தினித் சிந்தக கருணாரத்ன பதவி விலகியதால் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.
புத்தசாசன, சமய மற்றும் கலாசார விவகாரங்கள், தேசிய ஒருமைப்பாடு, சமூக பாதுகாப்பு மற்றும் ஊடக அமைச்சரும் அமைச்சரவைப் பேச்சாளருமான விஜித ஹேரத் குறித்த யோசனையை முன்வைத்தார்.
எச்.எஸ்.கே.பண்டார அரசாங்க தகவல் திணைக்களத்தின் பணிப்பாளராக (நிர்வாகி) பணியாற்றும் இலங்கை நிர்வாக சேவையின் தரம் I அதிகாரி என்பது குறிப்பிடத்தக்கது.