Date:

பேரூந்து கட்டணத்தை குறைக்க கலந்துரையாடல்

எரிபொருள் விலை குறைவினால் பேரூந்து கட்டணத்தை 04 வீதத்தால் குறைக்க முடியும் என அகில இலங்கை தனியார் பேரூந்து உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

 

28 ரூபாவாக உள்ள குறைந்தபட்ச பேரூந்து கட்டணத்தை 25 ரூபாவாக குறைக்க முடியும் என அதன் செயலாளர் அஞ்சன பிரியஞ்சித் தெரிவித்துள்ளார்.

 

கடந்த கட்டண திருத்தத்தின் போது ஆட்டோ டீசலின் விலை 11 ரூபாவினாலும் இன்றைய நிலவரப்படி 24 ரூபாவினாலும் குறைக்கப்பட்டுள்ளதால் பேரூந்து கட்டணத்தை குறைக்க முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், எரிபொருள் விலை குறைக்கப்பட்டாலும் முச்சக்கரவண்டி கட்டணத்தை குறைக்கும் சாத்தியம் இல்லை என அகில இலங்கை முச்சக்கரவண்டி சாரதிகள் மற்றும் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

 

எரிபொருள் விலை குறைந்த போதிலும், டயர்கள், உதிரி பாகங்கள் மற்றும் பிற மூலப்பொருட்களின் விலைகள் இன்னும் அதிகமாகவே இருப்பதாக அதன் தலைவர் சுதில் ஜெய்ருக் தெரிவித்தார்.

எவ்வாறாயினும் பெட்ரோலின் விலை 300 ரூபாவுக்கு கீழ் குறைக்கப்பட்டால் முச்சக்கர வண்டி கட்டணத்தை குறைக்க முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

சுங்க இயக்குனர் ஜெனரலை உடனடியாக கைது செய்!

சர்ச்சையை ஏற்படுத்திய 323 கொள்கலன்களில் எந்த ஆயுதங்களும் இல்லை என்று கூறிய...

இலங்கை வரும் கீதா கோபிநாத்!

சர்வதேச நாணய நிதியத்தின் முதல் துணை நிர்வாக இயக்குநர் கலாநிதி கீதா...

4 மாணவிகளை AI மூலம் நிர்வாணப்படுத்திய 2 மாணவர்கள்

இம்முறை சாதாரண தரப் பரீட்சைக்குத் தயாராகும் நான்கு பாடசாலை மாணவிகளின் முகத்தில்...

ரணில் CIDயில் ஆஜராகின்றார்

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, எதிர்வரும் புதன்கிழமை (11)அன்று குற்றப் புலனாய்வுத்...

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/newsswqr/public_html/wp-includes/functions.php on line 5373