Date:

சாதாரண தர பரீட்சை விடை தாள் மீள் திருத்தம் தொடர்பில் வெளியான செய்தி

சாதாரணதர பரீட்சையின் விடைத்தாள்களை மீள் திருத்தம் செய்வதற்கான விண்ணப்பங்கள் ஒக்டோபர் 01 முதல் ஒக்டோபர் 15ஆம் திகதி வரை ஏற்றுக் கொள்ளப்படும் என பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

2023 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையின் பெறுபேறுகள் இணையவழி ஊடாக உத்தியோகபூர்வமாக நேற்று நள்ளிரவு வௌியாகி இருந்தது.

இம்முறை நாடளாவிய ரீதியில் 452,979 விண்ணப்பதாரர்கள் பங்குபற்றியதோடு, சாதாரணதரப் பரீட்சை நாடளாவிய ரீதியில் 3,527 நிலையங்களில் நடைபெற்றது.

 

387,648 பாடசாலை விண்ணப்பதாரர்களும் 65,331 தனியார் விண்ணப்பதாரர்களும் இதில் உள்ளடங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

தற்போது வௌியாகியுள்ள பெறுபேறுகள் தொடர்பில் மேலதிக தகவல்களைப் பெற விரும்பினால் 1911 அல்லது 011 2 785 922, 0112 786 616, 011 2 784 208 அல்லது 011 2 784 537 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு அழைக்குமாறும் பரீட்சை திணைக்களம் அறிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

கம்பஹா மருத்துவமனையில் பதற்றம்

கம்பஹா மாவட்ட மருத்துவமனை வளாகத்தில், மருத்துவமனை பாதுகாப்பு அதிகாரிகளின் அலட்சியத்தால் நோயாளிகள்...

மூன்றாம் உலகப் போர் மூளும் அபாயம்! – ரஷ்யா பகிரங்க எச்சரிக்கை!

இஸ்ரேல், ஈரான் போரால் மூன்றாம் உலகப் போர் மூளும் அபாயம் எழுந்திருக்கிறது. ஈரான்...

ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையை நிறுத்துவது எப்படி? – கல்வி பிரதியமைச்சரின் அறிக்கை!

ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சை ஒரேயடியாக நிறுத்தப்படாது என்று கல்வி மற்றும்...

பல தடவைகள் மழை பெய்யக்கூடும்

மேல், சப்ரகமுவ, வடமேல் மாகாணங்களிலும், நுவரெலியா, கண்டி, காலி, மற்றும் மாத்தறை...