இலங்கை பெண் ஒருவர் இத்தாலி – மிலான் நகரசபை தேர்தலில் போட்டியிடுகின்றார்.
தம்மிகா சந்திரசேகர என்ற குறித்த பெண் இலக்கம் 8ல் போட்டியிடுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
அவர் சுமார் 30 வருடங்களாக இத்தாலியில் வசிக்கின்றார்.
பல சமூக பணிகளில் ஈடுபடும் இவருக்கு அதிக வாக்குகள் கிடைக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
அத்துடன் மிலான் பகுதியில் உள்ள பெரும்பாலான இலங்கையர்களும் தமக்கு வாக்களிப்பார்கள் என எதிர்பார்ப்பதாக தம்மிகா சந்திரசேகர நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.