Date:

புதிய ஜனாதிபதியுடன் இணைந்து செயற்பட தயார் – IMF

இலங்கையின் புதிய ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க மற்றும் அவரது குழுவினருடன் இணைந்து செயற்பட எதிர்பார்ப்பதாக சர்வதேச நாணய நிதியம்(IMF) தெரிவித்துள்ளது.

 

இதுவரை ஏற்படுத்திக்கொள்ளப்பட்டுள்ள வெற்றியின் அடிப்படையில் இலங்கையின் பொருளாதாரத்தை முன்னோக்கிக் கொண்டுசெல்வது தொடர்பில் நடவடிக்கை எடுக்க எதிர்பார்த்துள்ளதாக சர்வதேச நாணய நிதியத்தின் பேச்சாளரொருவர் குறிப்பிட்டுள்ளார்.

 

2023ஆம் ஆண்டு இறுதியில் காணப்பட்ட நாட்டின் 17.5 பில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான சர்வதேச வர்த்தகக் கடன்களை மறுசீரமைப்பது தொடர்பில் இலங்கை மற்றும் சர்வதேச இறையாண்மை முறி உரிமையாளர்களின் பிரதிநிதிகளுக்கும் இடையே கொள்கையளவிலான இணக்கப்பாடு ஏற்படுத்திக்கொள்ளப்பட்டமையை சர்வதேச நாணய நிதியம் பாராட்டியுள்ளது.

கடன் வேலைத்திட்டத்தின் மூன்றாவது கட்டம் தொடர்பில் நாட்டின் புதிய நிர்வாகத்துடன் கலந்துரையாட தயாராக உள்ளதாக சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

யூடியூபர்கள் நீதிமன்ற தீர்ப்புகளை முன்கூட்டியே அறிவிப்பதா சிஸ்டம் சேன்ஞ்ச்?

நீதியை நிலைநாட்டும் செயற்பாடும், சட்டத்தின் ஆட்சியும் ஜனநாயக ரீதியாக முறையாக முன்னெடுக்கப்பட...

“ரணில் விக்கிரமசிங்கவை நெருங்க முடியாது, அவர்மீது கை வைக்க முடியாது”

“ வடக்கில் மக்களுக்குரிய காணிகளை முழுமையாக விடுவிக்கும் நிலைந்நாட்டிலேயே ஜனாதிபதி இருக்கின்றார்....

தபால் ஊழியர்களின் பணிப்புறக்கணிப்பு நிறைவு

தபால் தொழிற்சங்கத்தினர் முன்னெடுத்து வந்த பணிப்புறக்கணிப்பு நிறைவுக்கு வந்துள்ளது.   அமைச்சருடனான கலந்துரையாடலுக்கு பின்னர்...

பொரலஸ்கமுவ துப்பாக்கிதாரி தப்பிச் சென்ற வாகனம் கண்டுபிடிப்பு

பொரலஸ்கமுவ, மாலனி புலத்சிங்கள மாவத்தையில் துப்பாக்கி சூடு நடத்தி இளைஞர் ஒருவரை...