Date:

தேசிய மக்கள் சக்தியின் விசேட அறிவிப்பு!

2024ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலின் வாக்கு எண்ணிக்கை மற்றும் முடிவுகள் வெளியாவதில் முறைகேடுகளுக்கு இடமளிக்காமல் மிகத் துல்லியமாகவும் தெளிவாகவும் பணிகளைச் செய்ய தேர்தல் ஆணைக்குழுவும் அதனுடன் தொடர்புடைய அதிகாரிகளும் பணியாற்றுவார்கள் என்று நம்புவதாக தேசிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது.

 

விசேட அறிக்கை ஒன்றை வௌியிட்டு அந்த கட்சி இதனைக் குறிப்பிட்டுள்ளது.

 

அதேபோல் வாக்கு எண்ணும் மத்திய நிலையங்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கு பொலிஸார் உள்ளிட்ட பாதுகாப்பு பிரிவு நடவடிக்கை எடுக்கும் என நம்புவதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த சூழ்நிலையில், இரவு ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளமை தேர்தல் முடிவுகள் வௌியாகும் போது பொது மக்கள் அமைதியை பேணும் நோக்கில் மாத்திரம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக நாங்கள் நம்புகிறோம் என குறிப்பிட்டுள்ள தேசிய மக்கள் சக்தி, தேர்தலின் பின்னரான நாட்டினுள் அமைதியான சூழலை பராமரித்து செல்ல தேவையான நடவடிக்கைகளை எடுக்கமாறு பாதுகாப்பு பிரிவினரிடம் கோரும் நிலையில், நாட்டினுள் அமைதியை பாதுகாப்பதற்காக முழுமையான ஆதரவினை வழங்குமாறு தேசிய மக்கள் சக்தி, பொது மக்களிடம் கோரியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

ரணில் எம்.பி ஆவாரா?: ருவன் அதிரடி பதில்

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இந்த நேரத்தில் பாராளுமன்றத்தில் இருந்தால் அது...

உக்ரேன் மீது 800 ட்ரோன்களை ஏவிய ரஷ்யா

உக்ரேன் - ரஷ்யா மோதல் தொடங்கியதில் இருந்தே இதுதான் மிகப் பெரிய...

மேலதிக பாகங்கள் பொருத்தப்பட்ட வாகனங்கள் நாளை முதல் எச்சரிக்கை

ஆபத்தான வகையில் மேலதிக பாகங்கள் பொருத்தப்பட்ட வாகனங்களுக்கு எதிராக நாளை முதல்...

பாடசாலை நேரங்களில் கனிமப் போக்குவரத்துக்கு தடை

பாடசாலை நாட்களில் கனிமப் போக்குவரத்து நடவடிக்கைகளை தடை விதிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக புவியியல்...