Date:

ஜனாதிபதித் தேர்தல் – இறுதி தேர்தல் பேரணிகள் இன்று!

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் பிரதான வேட்பாளர்களின் இறுதிக் கூட்டங்கள் இன்று கொழும்பு மற்றும் வெளிமாவட்டங்களில் நடைபெறவுள்ளன.

 

சுயேட்சை வேட்பாளர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் வெற்றியை உறுதிப்படுத்தும் “ரணிலால் முடியும்” பிரச்சாரக் கூட்டங்கள் இன்று நடைபெறவுள்ளன.

அதன்படி, இன்று பிற்பகல் 1 மணிக்கு மாத்தறை, உயன்வத்தை மைதானத்திலும், பிற்பகல் 2 மணிக்கு காலி சமனல விளையாட்டரங்கிலும், பிற்பகல் 3 மணிக்கு களுத்துறை பொது விளையாட்டரங்கிலும் இந்தப் பேரணிகள் நடைபெறவுள்ளன. மேலும் மாலை 4 மணிக்கு ஹோமாகம நகரிலும், இறுதிப் பேரணி மாலை 5.30 மணிக்கு கொழும்பு கொஸ்கஸ் சந்தியிலும் நடைபெறவுள்ளது.

SJB ஜனாதிபதி வேட்பாளரும் எதிர்க்கட்சித் தலைவருமான சஜித் பிரேமதாசவின் இறுதிப் பேரணி இன்று (18) பஞ்சிகாவத்தை டவர் மண்டபத் திரையரங்கிற்கு முன்பாக நடைபெறவுள்ளது.

 

தேசிய மக்கள் சக்தி ஜனாதிபதி வேட்பாளர் அநுரகுமார திஸாநாயக்கவின் இறுதிப் பேரணி இன்று (18) நுகேகொட ஆனந்த சமரகோன் திறந்தவெளி அரங்கில் நடைபெறவுள்ளது.

 

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ஷவின் இறுதிப் பேரணி பிலியந்தலை சோமவீர சந்திரசிறி விளையாட்டரங்கில் பிற்பகல் 2 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

வெல்லம்பிட்டியில் இன்று அதிகாலை துப்பாக்கிச் சூடு

வெல்லம்பிட்டி - கித்தம்பவ்ப பகுதியில் இன்று (25) அதிகாலை துப்பாக்கி சூடு...

கொழும்பின் பிரதி பொலிஸ்மா அதிபர் கைது

கொழும்பு பிரிவுக்கு பொறுப்பான பிரதி பொலிஸ்மா அதிபர் உதித்த லியனகே இன்று...

பணிப்புறக்கணிப்பை கைவிட்ட அரச வைத்திய அதிகாரிகள்

நாடு தழுவிய ரீதியில் இன்று (25) முன்னெடுக்கப்படவிருந்த பணிப்புறக்கணிப்பை கைவிட்டுள்ளதாக அரச...

யூடியூபர்கள் நீதிமன்ற தீர்ப்புகளை முன்கூட்டியே அறிவிப்பதா சிஸ்டம் சேன்ஞ்ச்?

நீதியை நிலைநாட்டும் செயற்பாடும், சட்டத்தின் ஆட்சியும் ஜனநாயக ரீதியாக முறையாக முன்னெடுக்கப்பட...