ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான அனைத்து தேர்தல் பிரச்சாரங்களும் புதன்கிழமை (18) நள்ளிரவு 12.00 மணிக்கு பின்னர் முடிக்கப்பட வேண்டும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
புதன்கிழமை (18) நள்ளிரவுக்குப் பின்னர் தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளை மேற்கொள்பவர்களுக்கு 50,000 ரூபாய் அபராதமும் ஒரு மாதத்திற்கு குறையாத சிறைத்தண்டனை விதிக்கப்படும் எனவும் அமைதியான காலப்பகுதியில் அச்சு மற்றும் இலத்திரனியல் ஊடகங்களின் ஊடாக வேட்பாளர்களை விளம்பரப்படுத்த கூடாது எனவும் தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.