Date:

தேசிய ஷுரா சபையின் மீலாத் தின வாழ்த்துச் செய்தி

நபிகளாரின் ஒழுக்க விழுமிய வாழ்வு சிறுபான்மை முஸ்லிம்களுக்கு நல்லதொரு முன்மாதிரி

 

“நபியே நீர் மகத்தான பண்பாடுகளோடு இருக்கிறீர்” (அல்குர்ஆன்)

 

நபிகளார் (ஸல்) அவர்கள் தனது நுபுவத்துக்கு முன்னரான மக்கா வாழ்க்கையில் ஒழுக்க விழுமியங்களுடன், உயர் பண்பாடுகளோடு வாழ்ந்து வந்தார்கள். அவர்களை மறுத்து, எதிர்த்து வந்தவர்கள் கூட அன்னாரது நற்குணங்களுக்கு சான்று பகர்ந்தார்கள். இது சிறுபான்மையாக வாழும் முஸ்லிம் சமூகத்திற்கு நல்லதொரு முன்மாதிரியாகும்.

நபியவர்கள் தனக்கு நபித்துவம் கிடைப்பதற்க்கு முன்னரே வாய்மை, உண்மை, தைரியம், பொறுமை, சமூக சேவை, மனித சமுதாயத்தின் மீதான அக்கறை, பாவங்களில் இருந்து முற்று முழுதாக தூரமாக இருந்தமை இனபந்துக்களுடனான இறுக்கமான உறவு, அயல் வீட்டாருக்கான உரிமைகளை வழங்குவது போன்ற அடிப்படை பண்புகளோடு வாழ்ந்து வந்தார்கள்.

“ஒழுக்க விழுமியங்களை பரிபூரணப்படுத்தவே நான் அனுப்பப்பட்டுள்ளேன்” என நபி(ஸல்) கூறினார்கள்.

 

இதனால் அவர்கள் முன்வைத்த தூது அந்த மக்களால் அங்கீகரிக்கப்பட்டது. இஸ்லாம் என்றாலே பண்பாடுகள் தான் என்ற கருத்து வலுப்பெற்றது.

 

சிறுபான்மையாக இந்த நாட்டில் வாழும் முஸ்லிம்கள் நபியவர்களது இந்த அடிப்படையான பண்புகளை கைக்கொள்வதற்கு இந்த சந்தர்ப்பத்தில் திடசங்கற்பம் பூணவேண்டும். அல்லாஹ்வின் அருள் கிட்டுவதற்கும், பிற சமூகங்களுகது நன்மதிப்பை வென்று வாழ்வதற்கும், சமூக ஸ்திரப்பாட்டுக்கும் நபியவர்களது இந்தப் பண்புகளை அனைவரும் முன்மாதிரியாகக் கொள்வது அவசியமாகும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

யூடியூபர்கள் நீதிமன்ற தீர்ப்புகளை முன்கூட்டியே அறிவிப்பதா சிஸ்டம் சேன்ஞ்ச்?

நீதியை நிலைநாட்டும் செயற்பாடும், சட்டத்தின் ஆட்சியும் ஜனநாயக ரீதியாக முறையாக முன்னெடுக்கப்பட...

“ரணில் விக்கிரமசிங்கவை நெருங்க முடியாது, அவர்மீது கை வைக்க முடியாது”

“ வடக்கில் மக்களுக்குரிய காணிகளை முழுமையாக விடுவிக்கும் நிலைந்நாட்டிலேயே ஜனாதிபதி இருக்கின்றார்....

தபால் ஊழியர்களின் பணிப்புறக்கணிப்பு நிறைவு

தபால் தொழிற்சங்கத்தினர் முன்னெடுத்து வந்த பணிப்புறக்கணிப்பு நிறைவுக்கு வந்துள்ளது.   அமைச்சருடனான கலந்துரையாடலுக்கு பின்னர்...

பொரலஸ்கமுவ துப்பாக்கிதாரி தப்பிச் சென்ற வாகனம் கண்டுபிடிப்பு

பொரலஸ்கமுவ, மாலனி புலத்சிங்கள மாவத்தையில் துப்பாக்கி சூடு நடத்தி இளைஞர் ஒருவரை...