Date:

ஜனாஸா எரிப்புக்கு எதிராக குரல் கொடுத்தது நாங்கள் மட்டுமே என சஜித் தெரிவிப்பு

ரணில் விக்கிரமசிங்கவும் அநுரகுமார திசாநாயகவும் நாடு முழுவதும் சென்று கூட்டம் போட்டாலும், ஜனாஸா நல்லடக்கமா எரிப்பதா என்கின்ற பிரச்சினையின் போது அவற்றிலிருந்து விலகியிருந்தார்கள். அவர்கள் அன்று முஸ்லிம் சமூகத்துக்காக முன்னிற்கவில்லை. அன்று கோட்டாபய ராஜபக்ச கடைபிடித்த மோசமான இனவாத கொள்கைக்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தியும், ஐக்கிய மக்கள் கூட்டணியுமே அரசியல் இலாபங்களை விடுத்து வீதிக்கிரங்கியது என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

 

2024 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு ஐக்கிய மக்கள் கூட்டணி ஏற்பாடு செய்த 54 ஆவது மக்கள் வெற்றி பேரணி எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் கல்முனையில் செப்டம்பர் 14 ஆம் திகதி வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டது. இதில் கலந்து கொண்டு கருத்து உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் இவ்வாறு தெரிவித்தார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல், கொரோனா மற்றும் வங்குரோத்துதன்மை ஆகிய இந்த மூன்று அனர்த்தங்களினாலும் நாட்டு மக்கள் இன்று அசெளகரியங்களை எதிர்கொண்டுள்ளனர். இதன் காரணமாக பெரும்பாலானவர்கள் வறியவர்களாக மாறி இருக்கின்றார்கள். ஏழ்மை அடைந்துள்ளனர். இந்த வறுமையை போக்குவதற்கு வேலைத்திட்டங்களை முன்னெடுத்துள்ளோம். இது தொடர்ந்தும் நிவாரணங்களை வழங்குகின்ற வேலைத்திட்டமல்ல. மக்களை வறுமையில் இருந்து மீட்டெடுப்பதற்காக 24 மாதங்களுக்கு ஐந்து வேலைத்திட்டங்களின் ஊடாக மாதாந்த 20 ஆயிரம் ரூபா வீதம் வழங்குவோம் என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

விவசாயிகளின் விவசாய நடவடிக்கைகளுக்காக 5000 ரூபாவுக்கு உரமூடை ஒன்றை வழங்குவோம். மீனவ சமூகத்திற்கு நிவாரண அடிப்படையில் எரிபொருளை வழங்குவோம். அத்தோடு மீனவர்களுக்கு தேவையான நங்கூரமிடக்கூடிய நிலப்பிரதேசத்தையும் அமைத்துக் கொடுப்பதோடு, சகல வசதிகளோடும் விவசாயத்தில் ஈடுபடக்கூடிய நிலையையும் ஏற்படுத்துவோம். அனைத்து பாடசாலைகளுக்கும் சகல வசதிகளையும் பெற்றுக் கொடுத்து சிறந்த கல்வியை பெறுவதற்கான சூழ்நிலையை உருவாக்குவோம் என எதிர்க்கட்சித் தலைவர் இங்கு மேலும் குறிப்பிட்டார்.

 

வலையொளி இணைப்பு-

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

யூடியூபர்கள் நீதிமன்ற தீர்ப்புகளை முன்கூட்டியே அறிவிப்பதா சிஸ்டம் சேன்ஞ்ச்?

நீதியை நிலைநாட்டும் செயற்பாடும், சட்டத்தின் ஆட்சியும் ஜனநாயக ரீதியாக முறையாக முன்னெடுக்கப்பட...

“ரணில் விக்கிரமசிங்கவை நெருங்க முடியாது, அவர்மீது கை வைக்க முடியாது”

“ வடக்கில் மக்களுக்குரிய காணிகளை முழுமையாக விடுவிக்கும் நிலைந்நாட்டிலேயே ஜனாதிபதி இருக்கின்றார்....

தபால் ஊழியர்களின் பணிப்புறக்கணிப்பு நிறைவு

தபால் தொழிற்சங்கத்தினர் முன்னெடுத்து வந்த பணிப்புறக்கணிப்பு நிறைவுக்கு வந்துள்ளது.   அமைச்சருடனான கலந்துரையாடலுக்கு பின்னர்...

பொரலஸ்கமுவ துப்பாக்கிதாரி தப்பிச் சென்ற வாகனம் கண்டுபிடிப்பு

பொரலஸ்கமுவ, மாலனி புலத்சிங்கள மாவத்தையில் துப்பாக்கி சூடு நடத்தி இளைஞர் ஒருவரை...