Date:

ஊரடங்கு பிறப்பிக்கப்படுமா?

அடுத்த வாரம் ஜனாதிபதி தேர்தல் வாக்களிப்பு நடைபெறவுள்ளநிலையில் ஊரடங்கு சட்டத்தை பிறப்பிப்பது குறித்து சிந்திக்கவில்லை என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் வியானி குணதிலக தெரிவித்துள்ளார்.

 

ஊரடங்கை பிறப்பிப்பதற்கான ஏற்பாடுகள் திட்டங்கள் எதனையும் முன்னெடுக்கவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

 

பாதுகாப்பு அமைச்சர் ( ஜனாதிபதி) வேண்டுகோள் விடுத்தால் மாத்திரமே ஊரடங்கை பிறப்பிப்போம் என அவர்தெரிவித்துள்ளார்.

 

ஜனாதிபதிக்கு ஊரடங்கு உத்தரவை பிறப்பிப்பதற்கான அதிகாரம் உள்ளது,ஆனால் அதற்கான திட்டமிடல்களில் நாங்கள் ஈடுபடவில்லை என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார்.

 

இதேவேளை இதுகுறித்த மோர்னிங்கின் கேள்விக்கு பொலிஸ்பேச்சாளர் கருத்துகூற மறுத்துள்ளார் எனினும் ஊரடங்கை பிறப்பிக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கே உள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.

அவர் ஊரடங்கு அவசியம் என்றால் அதனை பிறப்பிக்கலாம் என பொலிஸ் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

அகில விராஜ் இலஞ்சம், ஊழல் ஆணைக்குழுவில் முன்னிலை

முன்னாள் அமைச்சர் அகில விராஜ் காரியவசம் இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை...

தேரடி வீதியை சுற்றி வந்த நல்லூரான்

வரலாற்றுச் சிறப்புமிக்க நல்லையம்பதி அலங்கார கந்தன் மஹோற்சவத்தின் 24ஆவது நாளான தேரடி...

FCID இல் ரணில் ஆஜர்

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சற்று முன்னர் குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு...

பணிப் புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ள தபால் ஊழியர்களுக்கு இம் மாதம் சம்பளம் வழங்கப்படாது

பணிப் புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ள தபால் ஊழியர்களுக்கு இம் மாதம் சம்பளம் வழங்கப்படாது...