Date:

ஜனாதிபதி தேர்தல் பெறுபேறுகளை தரமாட்டேன்

ஜனாதிபதி தேர்தல் எதிர்வரும் 21ஆம் திகதியன்று நடைபெறவுள்ளது. இன்று (04) ஆரம்பமாகும் தபால் மூல வாக்குப்பதிவு, வௌ்ளிக்கிழமை (06) நிறைவடையும். இந்நிலையில், தேர்தல் செயற்பாடுகள் மும்முரமாக இடம்பெற்றுக்கொண்டிருக்கின்றன.

 

நாட்டின் அனைத்து ஊடக நிறுவனங்களும் தேர்தல் சட்டத்திற்கு அமைவாக நடுநிலையுடன் செயற்பட வேண்டும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

 

சில ஊடக நிறுவனங்கள் சில எதிர்பார்ப்புகளை ஊக்குவிப்பதாக ஆணைக்குழுவுக்கு தொடர்ந்து முறைப்பாடு கிடைக்கிறது என அதன் தலைவர் ஆர்.எம்.ஏ.பி. ரத்நாயக்க கூறுகிறார்.

இது தொடர்பில் நிறுவனங்களுக்கு ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளதாகவும், அறிவுறுத்தல்களின்படி செயற்படாவிட்டால் எதிர்காலத்தில் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் எச்சரித்துள்ளார்.

அந்த நிறுவனங்களுக்கு தேர்தல் ஆணையம் வெளியிடும் அறிவிப்புகள் அப்பப்படாது என்றும், அவ்வாறான நிறுவனங்களுக்கு தேர்தல் முடிவுகள் வழங்கப்படாது என்றும் அவர் கூறியுள்ளார் என செய்திகள் வெளியாகியுள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

தபால் ஊழியர்களின் பணிப்புறக்கணிப்பு நிறைவு

தபால் தொழிற்சங்கத்தினர் முன்னெடுத்து வந்த பணிப்புறக்கணிப்பு நிறைவுக்கு வந்துள்ளது.   அமைச்சருடனான கலந்துரையாடலுக்கு பின்னர்...

பொரலஸ்கமுவ துப்பாக்கிதாரி தப்பிச் சென்ற வாகனம் கண்டுபிடிப்பு

பொரலஸ்கமுவ, மாலனி புலத்சிங்கள மாவத்தையில் துப்பாக்கி சூடு நடத்தி இளைஞர் ஒருவரை...

தபால் ஊழியர்களுக்கும் அமைச்சருக்கும் இடையில் இன்று விசேட கலந்துரையாடல்

வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள தபால் ஊழியர்களுக்கும், விடயத்திற்கு பொறுப்பான அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸவிற்கும்...

ரணிலின் கைது இலங்கையின் ஜனநாயகத்திற்கு கடுமையான அச்சுறுத்தல்

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கைது செய்யப்பட்டமை கவலைக்குரிய விடயமாகும் என...