Date:

கருணாரத்ன பரணவிதான பாராளுமன்ற உறுப்பினராக பதவி பிரமாணம்

9 ஆவது பாராளுமன்றத்தின் பாராளுமன்ற உறுப்பினராக கருணாரத்ன பரணவிதான இன்று (03) சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்து கொண்டார்.

 

இரத்தினபுரி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினராக இருந்த தலதா அத்துகோரள இராஜினாமா செய்ததன் காரணமாக ஏற்பட்ட வெற்றிடத்திற்காக இவர் பாராளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்பட்டார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் இரத்தினபுரி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் தலதா அத்துகோரள தனது பதவியை இராஜினாமா செய்வதாக கடந்த ஓகஸ்ட் மாதம் 21 ஆம் திகதி பாராளுமன்றத்திற்கு அறிவித்தார்.

பாராளுமன்றத்தில் உணர்வுப்பூர்வமான உரையை ஆற்றிய அவர், ஐக்கிய தேசியக் கட்சி பிளவுபடுவதில் தமக்கு விருப்பம் இல்லை என குறிப்பிட்டுள்ளார்.

 

தலதா அத்துகோரள ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்த மறைந்த காமினி அத்துகோரலவின் சகோதரி ஆவார்.

 

அவர் 2004 இல் முதன்முதலில் பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்டார்.

 

இதேவேளை, கடந்த 2020 ஓகஸ்ட் மாதம் நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலில் கருணாரத்ன பரணவிதான 36,787 வாக்குகளைப் பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

ஏப்ரல் 15 அரச விடுமுறை தினமா?

ஏப்ரல் 15 ஆம் திகதி அரச விடுமுறை தினமாக அறிவிப்பது குறித்து...

தேசபந்து நீதிமன்றுக்கு அழைத்து வரப்பட்டார்

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன், மாத்தறை நீதவான் நீதிமன்றத்திற்கு...

படலந்த ஆணைக்குழு அறிக்கை மீதான பாராளுமன்ற விவாதம் இன்று!

படலந்த ஆணைக்குழு அறிக்கை மீதான பாராளுமன்ற விவாதம் இன்று (10) இடம்பெறவுள்ளது.   ஏப்ரல்...

வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வுப் பகுதி…

மத்திய தென்மேற்கு வங்கக் கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி,...

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/newsswqr/public_html/wp-includes/functions.php on line 5373