Date:

சிவப்பு எச்சரிக்கை – அடுத்த 24 மணிநேரத்தில் கடும் மழை

அடுத்த 24 மணித்தியாலத்தில் பலத்த மழை பெய்யுமென வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இன்று பிற்பகல் ஒரு மணிக்கு வெளியிடப்பட்ட சிவப்பு வானிலை எச்சரிக்கை நாளை பிற்பகல் ஒரு மணி வரை அமுலில் இருக்குமென அறிவிக்கப்பட்டுள்ளது.

மேல், சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி , மாத்தறை , கண்டி , நுவரெலியா மாவட்டங்களிலும் சில பகுதிகளில் 150 மில்லிமீற்றருக்கும் அதிகரித்த மழைவீழ்ச்சி பதிவாகுமென திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

 

இடியுடன் கூடிய மழையின் போது தற்காலிகமாக பலத்த காற்று வீசக்கூடும் இதேவேளை இலங்கையை அண்மித்த தாழ் வளிமண்டலத்தில் காணப்படும் குழப்ப நிலை காரணமாக நாட்டின் தென்மேற்கு பிரதேசங்களில் நிலவும் மழையுடன் கூடிய வானிலை தொடர்ந்தும் எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

CIDயில் இருந்து வெளியேறிய கம்மன்பில!

சர்ச்சைக்குரிய 323 கப்பல் கொள்கலன்கள் விடுவிக்கப்பட்ட விவகாரம் தொடர்பில் வாக்குமூலம் அளிக்க...

தண்டனை சட்டவிரோதம்! | மஹிந்தானந்த எடுத்த அதிரடி தீர்மானம்!

உயர் நீதிமன்றம் 20 வருட கடூழிய சிறைத்தண்டனை விதித்தை எதிர்த்து முன்னாள்...

அமெரிக்க டொலருக்கு நிகராக ரூபாவின் பெறுமதியில் வீழ்ச்சி..!

கடந்த வெள்ளிக்கிழமையுடன் ஒப்பிடும் போது  அமெரிக்க டொலருக்கு நிகராக இலங்கை ரூபாவின்...

அனைத்து கல்வி தொழிற்சங்கங்களுடன் இணைந்து வேலை நிறுத்தம்

தனியார் பல்கலைக்கழகங்கள் மூலம் கல்வி இளங்கலைப் பட்டம் பெற்ற ஏராளமானோருக்கு அரசாங்கம்...

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/newsswqr/public_html/wp-includes/functions.php on line 5373