எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் எந்தவொரு வேட்பாளர்களுக்கும் தான் ஆதரவு வழங்க போவதில்லை என முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டார நாயக்க குமாரதுங்க தெரிவிக்கின்றார்.
அத்தணகல தேர்தல் தொகுதியின் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி ஆதாரவாளர்களை சந்தித்து கலந்துரையாடிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான தனது நிலைப்பாட்டை அறிவிக்கும் வகையில் இந்த சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் ஒரு தரப்பினர் ரணில் விக்ரமசிங்கவிற்கும், மற்றுமொரு தரப்பினர் சஜித் பிரேமதாஸவிற்கும் ஆதரவை வெளியிட்டுள்ளனர்.
இந்த நிலையில், தமக்கு விரும்பிய வேட்பாளருக்கு வாக்களிக்குமாறு தெரிவித்துள்ள முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டார நாயக்க குமாரதுங்க, அதற்கு தான் எந்தவிதத்திலும் எதிர்ப்பு கிடையாது எனவும் கூறியுள்ளார்.