பிரபல தொலைக்காட்சி தொகுப்பாளர் டிடி, கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டுள்ளார்.
நாட்டில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் கடந்த ஜனவரி மாதம் 16 ஆம் திகதி தொடங்கி நடைபெற்று வருகின்றன. திரைப்பட மற்றும் தொலைக்காட்சிப் பிரபலங்கள் பலரும் கரோனா தடுப்பூசியைச் செலுத்திக்கொண்டு வருகிறார்கள்.
இந்நிலையில் பிரபல தொலைக்காட்சி தொகுப்பாளர் டிடி என்கிற திவ்யதர்ஷினி, கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டுள்ளார். இதுபற்றி ட்விட்டரில் அவர் கூறியதாவது:
தடுப்பூசி செலுத்திக்கொள்வதா வேண்டாமா என உங்களைப் போலவே எனக்கும் சந்தேகம் இருந்தது. நான் உடல்நலத்துக்காக மருந்துகள் எடுத்து வருகிறேன். ஆனால் தடுப்பூசி செலுத்திக்கொள்வது மட்டும் தான் 3 வது அலையிலிருந்து நம்மைக் காப்பாற்றும் என என்னுடைய மருத்துவர் கூறினார். எனவே தற்போது எடுத்து வரும் மருந்துகளை நிறுத்திக்கொண்டு, கோவிஷீல்ட் தடுப்பூசியைச் செலுத்திக்கொண்டுள்ளேன். நீங்கள் இதுபற்றி முடிவெடுப்பது தொடர்பாக உங்கள் மருத்துவரிடம் மட்டுமே கலந்தாலோசிக்கவும் என்று கூறியுள்ளார்.