முப்படையிலுள்ள இஸ்லாமியர்களுக்கு ஹஜ் யாத்திரைக்கான இலவச வாய்ப்பை வழங்க சவூதி அரேபிய அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.
பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித்த பண்டார தென்னகோனின் விசேட கோரிக்கைக்கு அமைவாக இலங்கைக்கான சவூதி அரேபிய தூதுவர் கலீத் ஹமட் அல்கதானியின் தலையீட்டில் இந்த வாய்ப்பு கிட்டியுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு வௌியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இராஜாங்க அமைச்சரின் கோரிக்கைக்கு அமைய சவூதி அரேபிய தூதுவரினால் வருடாந்த ஹஜ் யாத்திரைக்கான 5 விசேட வாய்ப்புகளை அந்நாட்டு அரசாங்கத்தின் ஆதரவுடன் பெற்றுக் கொடுப்பதற்கு தேவையான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.