நாட்டில் கடந்த சில தினங்களில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கில் பாதிக்கப்பட்ட வீடுகளை சுத்திகரிப்பதற்காக அரசாங்கத்தினால் வழங்கப்படும் 10,000 ரூபா நிவாரண தொகையை பெற்றுக் கொள்ளும் நடைமுறை குறித்து இன்று (07) இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது.
இந்த தொகையை பெற்றுக்கொள்வதற்கு கிராம உத்தியோகத்தரின் உறுதிப்படுத்தப்பட்ட சான்றிதழ் கட்டாயம் என நிலையத்தின் பணிப்பாளரும், ஊடகப் பேச்சாளருமான பிரதீப் கொடிபிலி தெரிவித்தார்.
கிராம உத்தியோகத்தரின் சான்றிதழ் மற்றும் அதற்கான பரிந்துரைகள் தேவைப்படும் என அவர் கூறுகின்றார்,
மழையுடன் கூடிய சீரற்ற வானிலை காரணமாக கடந்த முதலாம் திகதி முதல் இதுவரை 13 மாவட்டங்களைச் சேர்ந்த 113 பிரதேச செயலக பிரிவுகளில் வாழும் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த சீரற்ற வானிலை காரணமாக 2,39,000 மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக நிலையத்தின் பணிப்பாளரும், ஊடகப் பேச்சாளருமான பிரதீப் கொடிபிலி குறிப்பிட்டுள்ளார்.