Date:

என் அழுத்தம் அதிகரிக்கும், நான் மரணிக்க நேரிடும்! – ஹர்ஷ டி சில்வா

தன்னை பதவியிலிருந்து நீக்குவதற்கான மோசடி நடவடிக்கை இடம்பெற்று வருவதாக பொது நிதி தொடர்பான குழுவின் (COPF) தலைவர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா குற்றம் சுமத்தியுள்ளார்.

இன்றைய (07ழு) நாடாளுன்ற அமர்வின் போதே அவர் இவ்வாறு குற்றம் சுமத்தியுள்ளார்.

மேலும் கருத்து தெரிவித்த அவர்,

“என்னை தலைவர் பதவியில் இருந்து நீக்குவதற்கு பொது நிதி தொடர்பான குழு உறுப்பினர்களிடமிருந்து கையெழுத்து சேகரிக்கப்பட்டு வருகின்றது.

உங்களுக்கு விருப்பம் இல்லையென்றால் நான் பதவி விலகுவதற்கு தயாராக உள்ளேன்.

பொது நிதி தொடர்பான குழுவின் தலைவராக நான் கடமையாற்றிய போது பல்வேறு சவால்களை எதிர்கொள்ள வேண்டியிருந்தது.

சி.ஓ.பி.எப் மதிப்பு கூட்டப்பட்ட வரி (VAT) மீது வைத்திருக்கும் நிலைப்பாட்டை பின்பற்றியதால் நான் நீக்கப்பட்டேன்,”

சீனி ஊழல் தொடர்பான உண்மைகளை வெளிப்படுத்தி செலுத்தும் வரியை 24 சதவீதமாக குறைக்கும் திட்டத்தை கொண்டு வர முடிந்தது.

மேலும், பொது நிதி தொடர்பான குழுவுடன் தொடர்புடைய பணியாளர்களுக்கு சம்பளம் வழங்க தனது

தனிப்பட்ட நிதியைப் பயன்படுத்த வேண்டும் என்றார்.

“இந்த பிரச்சினைகள் காரணமாக என் அழுத்தம் அதிகரிக்கும், நான் மரணிக்க நேரிடும்

நானும் பதற்றத்தில் உள்ளேன்” என ஹர்ஸ டி சில்வா ஆதங்கம் வெளியிட்டுள்ளார்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

தேசப்பந்து தென்னகோனின் முன்பிணை மனு நிராகரிப்பு

தாம் கைது செய்யப்படுவதைத் தவிர்க்குமாறும், முன் பிணைக் கோரியும் முன்னாள் பொலிஸ்மா...

1000 வௌிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு சாரதி அனுமதிப்பத்திரம்

கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் ஸ்தாபிக்கப்பட்டுள்ள மோட்டார் போக்குவரத்து திணைக்கள...

மனுஷ நாணயக்கார சிஐடியில் ஆஜர்

முன்னாள் அமைச்சர் மனுஷ நாணயக்கார நிதி குற்றவியல் விசாரணைப் பிரிவில் ஆஜராகியுள்ளார். நடைபெற்று...

சுகாதார சேவையாளர்களின் விடுமுறைகள் ரத்து

சுகாதார அமைச்சின் ஊழியர்கள் விடுமுறை பெறுவதால், அமைச்சின் கடமைகள் மற்றும் அத்தியாவசிய...