Date:

மோடியின் அழைப்பை ஏற்றார் ரணில்!

மூன்றாவது தடவையாக இந்திய பிரதமராக பதவி பிரமாணம் செய்துக்கொள்ளவுள்ள நரேந்திர மோடியின் பதவி பிரமாண நிகழ்வில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பங்கேற்க இணக்கம் தெரிவித்துள்ளார்.

 

நடைபெற்று முடிவடைந்த தேர்தலில் வெற்றியீட்டிய நரேந்திர மோடிக்கு, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தொலைபேசி ஊடாக வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதன்போது, தனது பதவி பிரமாண நிகழ்விற்கு பிரசன்னமாகுமாறு, இந்திய பிரதமர் நரேந்திர மோடி, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு அழைப்பு விடுத்துள்ளார்.

இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்பை, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஏற்றுக் கொண்டதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவிக்கின்றது.

நரேந்திர மோடியின் பதவி பிரமாண நிகழ்வு எதிர்வரும் 08ம் திகதி மாலை நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

ராஜித்தவின் வீட்டில் ஒட்டப்பட்ட அறிவித்தல்

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்னவை கைது செய்வதற்காக பிறப்பிக்கப்பட்ட பிடியாணையை காட்சிப்படுத்துவதற்காக...

கத்தோலிக்க ஆயர்கள் பேரவை ஜனாதிபதியுடன் சந்திப்பு

கொழும்பு உயர் மறை மாவட்ட பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை...

Breaking தென்னகோனுக்கு விளக்கமறியல்

குற்றப் புலனாய்வுத் துறையால் (CID) புதன்கிழமை (20)  கைது செய்யப்பட்ட முன்னாள்...

“அல்குர்ஆன்களை விடுவிக்கவும்”

சவுதி அரேபியாவில் இருந்து அனுப்பப்பட்ட புனித அல்குர்ஆன் பிரதிகள் அடங்கிய கொள்கலன்...