Date:

சீரற்ற வானிலையால் டெங்கு நோய் பரவும் அபாயம்

மே மாதத்திலிருந்து டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்துள்ளதாகவும், இது ஒரு தொற்றுநோயாக உருவாகக் கூடும் எனவும் தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு எச்சரித்துள்ளது.

 

தற்போது பெய்து வரும் பருவ மழையுடன் இந்த தொற்று நிலைமை தீவிரமாகக் கூடும் என அதன் பணிப்பாளர் டொக்டர் சுதத் சமரவீர தெரிவித்துள்ளார். மேலும், கடந்த ஓராண்டில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின்படி, நுளம்புகள் பெருகும் இடங்கள் அதிகரித்துள்ளமை அவதானிக்கப்பட்டுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது.

கடந்த வாரத்தில் டெங்கு அபாயத்துடன் கூடிய பதினைந்து (15) மாவட்டங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. கொழும்பு, கம்பஹா, களுத்துறை, கண்டி, காலி, மாத்தறை, அம்பாந்தோட்டை, யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, திருகோணமலை, குருநாகல், புத்தளம், பதுளை, இரத்தினபுரி, கேகாலை ஆகிய மாவட்டங்கள் இவ்வாறு அடையாளம் காணப்பட்டுள்ளன.

இந்த வருடத்தில் இதுவரை இருபத்து நான்காயிரத்து தொள்ளாயிரத்து இருபது டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதோடு அவர்களில் ஒன்பது பேர் உயிரிழந்துள்ளனர்.

அத்துடன், இம்மாதத்தின் கடந்த இரண்டு நாட்களில் நூற்று ஆறு டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாகவும், இது வேகமாக அதிகரித்து வருவதாகவும் தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் தலைவர் சரத் கணேகொட ராஜினாமா!

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் (SriLankan Airlines) மற்றும் ஸ்ரீலங்கன் கேட்டரிங் (SriLankan Catering)...

செவ்வந்தியின் பிறந்தநாளை கொண்டாடிய ​பொலிஸார்

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள சந்தேக நபரொருவருக்கு பிறந்தநாள் கொண்டாட்டம்...

கெஹெலிய காலத்து மருந்து கொள்வனவுகள் தொடர்பில் தடவியல் கணக்காய்வு

முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல சுகாதார அமைச்சராகப் பதவி வகித்த காலத்தில்,...

Breaking மின் கட்டண அதிகரிப்பு

2026 ஆம் ஆண்டின் இரண்டாம் காலாண்டிற்கான மின்சாரக் கட்டணத்தை அதிகரிப்பதற்கு இலங்கை...