வெசாக் தினத்தை முன்னிட்டு சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் கைதிகளை பார்வையிடுவதற்காக விசேட அனுமதி சிறைச்சாலைகள் திணைக்களத்தினால் வழங்கப்பட்டுள்ளது.
அதன்படி இன்றும் மற்றும் நாளை ஆகிய இரு தினங்களிலும் சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் கைதிகளுக்கு வெளியாட்களை பார்வையிடுவதற்காக அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
அதன் பிரகாரம் சிறைக்கைதிகளின் உறவினர்களால் கொண்டுவரப்படும் உணவு பண்டங்கள் மற்றும் சுகாதார பாதுகாப்பு பொருட்கள் மாத்திரம் கைதி ஒருவருக்கு பொதுமான அளவு பெற்றுக்கொடுப்பதற்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது