ஈரான் ஜனாதிபதி இப்ராஹினம் ரைசியின் திடீர் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து பாராளுமன்றத்தில் இன்று (22) ஒரு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.
பாராளுமன்ற நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படுவதற்கு முன்னர் ஆளும் கட்சியின் பிரதான கொறடாவான அமைச்சர் பிரசன்ன ரணதுங்க இந்த யோசனையை பாராளுமன்றத்தில் முன்வைத்து ஈரான் ஜனாதிபதியின் மறைவுக்கு இரங்கல் தெரிவிப்பதாக தெரிவித்தார்.
இலங்கைக்கு விஜயம் செய்த கடைசி அரச தலைவர் ஈரான் ஜனாதிபதி என்பதை நினைவு கூர்ந்த பிரசன்ன ரணதுங்க, உமா ஓயா திட்டத்தை நிறைவேற்றுவதற்கு தேவையான ஈரானின் ஏற்பாடுகள் மற்றும் ஆதரவை நினைவுகூர்ந்த அமைச்சர், ஈரான் ஜனாதிபதியின் மறைவுக்கு பாராளுமன்றத்தில் ஒரு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தி அனுதாபத்தை தெரிவிக்கும் யோசனையை முன்வைத்தார்.