இந்தோனேசியாவில் நடைபெறவுள்ள 10ஆவது உலக நீர் உச்சி மாநாட்டின் உயர்மட்டக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று (18) இலங்கையிலிருந்து புறப்பட்டுள்ளார்.
இந்தோனேசிய ஜனாதிபதி ஜோகோ விடோடோவின் அழைப்பின் பேரில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க குறித்த மாநாட்டில் பங்கேற்கவுள்ளார்.
10ஆவது உலக நீர் உச்சி மாநாட்டின் உயர்மட்டக் கூட்டம் இந்தோனேசியாவின் பாலி நகரில் இன்று(18) முதல் இம்மாதம்( 20)ஆம் திகதி வரை நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.