பதுளை – புவக்கொடமுல்ல பகுதிகளில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் நால்வர் காயமடைந்துள்ளனர்
குறித்த விபத்து இன்று முற்பகல் 10 மணியளவில் இடம் பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
தெஹிஅத்தகண்டிய பகுதியிலிருந்து பதுளை நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ் ஒன்றும், முச்சக்கரவண்டி ஒன்றும் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
இந்த விபத்தில் 79 வயதான ஒருவரே உயிரிழந்துள்ளார்.
குறித்த பகுதியிலுள்ள வளைவொன்றில், குழாய் நீர் பொருத்தும் நடவடிக்கை மேற்கொள்ளப்படுகின்றமையினால், ஒரு வழி போக்குவரத்து மாத்திரம் இடம்பெற்றமையே இந்த விபத்துக்கான காரணம் என தெரிய வந்துள்ளது.
இந்த விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பதுளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.