இலங்கையில் 24 இலட்சம் குடும்பங்களுக்கு மாதாந் தோரும் 10 கிலோ கிராம் அரிசியை இலவசமாக வழங்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் தீர்மானத்திற்கமைய இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது .
அத்தோடு அண்மைக்காலமாக அரசாங்கத்தால் இலவசமாக விநியோகிக்கப்படும் அரிசி தரமற்றதெனவும், அவை பணத்துக்காக விற்பனை செய்யப்படுவதாகவும் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு வந்தன.
இந்நிலையில், குறித்த குற்றச்சாட்டுகள் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்குமாறு மாவட்ட செயலாளர்களுக்கு பொது நிர்வாக அமைச்சின் செயலாளர் பணிப்புரை விடுத்துள்ளார்.