Date:

தலவாக்கலையில் காணாமல் போன குடும்பஸ்தர் சடலமாக மீட்பு !

தலவாக்கலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஹோலி ரூட் தோட்டத்தில் உள்ள குழந்தைகள் காப்பக பகுதியில் ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

தலவாக்கலை ஹோலி ரூட் தோட்ட பகுதியில் வசிக்கும் நபர் ஒருவர் வீட்டிலிருந்து சில தினங்களுக்கு முன்னர் காணாமல் போன நிலையில் அவரை தேடும் பணியில் உறவினர்கள் ஈடுபட்டார்கள்.

இந்நிலையில்  இன்று(15)  காலை தலவாக்கலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஹோலி ரூட் தோட்டத்தில் உள்ள குழந்தைகள் காப்பக பகுதியில் ஆண் ஒருவரின் சடலம்  கிடந்ததை அவதானித்த அப் பிரதேச மக்கள் இது தொடர்பில் பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.

இந்நிலையில் சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார்  சம்பவம் தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்ததுடன் , இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர் ஹொலீ ரூட் 18 ம்  தோட்ட பிரிவை சேர்ந்த 3  பிள்ளைகளின் தந்தை  எனவும் தெரிவிக்கப்படுகிறது.

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

முடிவைத் தீவிரப்படுத்திய அரச மருத்துவ அதிகாரிகள்!

சுகாதார அமைச்சினால் இணக்கம் காணப்பட்ட தீர்வுகளை நடைமுறைப்படுத்தத் தவறியமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து,...

இலங்கை பிரதமர்களின் பட்டியலில் மிகவும் கல்வி கற்றவர் ஹரிணி அமரசூரிய மட்டுமே!

இலங்கை வரலாற்றில் இதுவரை நியமிக்கப்பட்ட பிரதமர்களிடையே அதிக கல்வித் தகைமை உடையவர்...

விடைபெறும் லசித் மலிங்க!

இலங்கை கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சு ஆலோசகராக லசித் மலிங்கவின் ஒப்பந்தம்...

நுவரெலியாவில் குவியும் சுற்றுலா பயணிகள்

நுவரெலியாவில் நிலவும் மாறுபட்ட காலநிலை காரணமாகவும் ஞாயிறு வார விடுமுறை என்பதாலும்...