சுவிட்சர்லாந்தில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு வந்த ஒருவர் குளியலறையில் விழுந்து நேற்றுமுன்தினம் உயிரிழந்துள்ளார்.
பாலசிங்கம் உதயகுமார் என்ற 55 வயதுடையவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,
குறித்த நபர் சுவிஸில் இருந்து நவாலி தெற்கு, மானிப்பாய் பகுதியில் உள்ள அவரின் தாயார் வீட்டுக்கு வந்துள்ளார்.
இந்நிலையில், அவர் குறித்த வீட்டின் குளியலறையில் குளிக்கச் சென்றவேளை கீழே விழுந்து உயிரிழந்துள்ளார்.
அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டுள்ளார்.
அத்துடன், உடற்கூற்று பரிசோதனைக்காக அவரது சடலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.