Date:

இலங்கையை சுற்றியுள்ள கடலில் கண்காணிப்பு நடவடிக்கைக்கு அமெரிக்காவின் உளவு விமானம் !

இலங்கையை சுற்றியுள்ள கடலில் கண்காணிப்பு நடவடிக்கைகளுக்காக அமெரிக்காவில் இருந்து இலங்கைக்கு உளவு விமானம் ஒன்று வழங்கப்பட உள்ளது.

Beech King Air 360er ரக புதிய விமானத்தை அமெரிக்கா வழங்கவுள்ளது.

எதிர்வரும் ஆண்டு ஜூன் அல்லது ஜூலை மாதத்திற்குள் குறித்த விமானம் இலங்கைக்கு கொண்டுவரப்படும்.

வான்வழியாக கடல்சார் கண்காணிப்பை மேற்கொள்ளும் திறன் கொண்ட அமெரிக்க பாதுகாப்பு படைகளுக்கு சொந்தமான இடைமறிப்பு விமானம் கடந்த மார்ச் மாதம் இலங்கைக்கு வந்துள்ளது.

இவ்வாறு வந்திறங்கிய விமானம் சேலஞ்சர் 605 என்ற கண்காணிப்பு விமானமாகும். இது விமானப்படை விமானிகள் மற்றும் இலங்கை முப்படை அதிகாரிகளுக்கு பயிற்சி அளிக்க பயன்படுத்தப்பட்டது.

மேலும், முப்படையைச் சேர்ந்த மேலும் பத்து அதிகாரிகள் அடுத்த சில மாதங்களில் பயிற்சிக்காக அமெரிக்கா செல்ல உள்ளனர்.

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

அங்குனுகொலபலஸ்ஸ சிறைச்சாலைக்கு மாற்றப்பட்ட கைதிகள்

மாத்தறை சிறைச்சாலையில் ஏற்பட்ட அமைதியின்மையைத் தொடர்ந்து, சுமார் 200 கைதிகள் அங்குனுகொலபலஸ்ஸ...

டான் பிரியசாத்தின் படுகொலை: மூவர் கைது

சமூக ஆர்வலரும் கொலன்னாவை நகரசபை வேட்பாளருமான டான் பிரியசாத்தின் கொலை தொடர்பில்...

சிலாபத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கு

சிலாபம் நகரில் அண்மையில் பெய்த மழை காரணமாக சில வீதிகளில் வெள்ளம்(23)...

இத்தாலிக்கு சென்றார் கர்தினால் மல்கம் ரஞ்சித்

எதிர்வரும் 26ஆம் திகதி வத்திக்கானில் உள்ள செயிண்ட் பீட்டர்ஸ் சதுக்கத்தில் நடைபெறும்...

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/newsswqr/public_html/wp-includes/functions.php on line 5373