Date:

கொழும்பில் அதிரடியாக கைது செய்யப்பட்ட 15 வெளிநாட்டவர்கள்; நாடு கடத்த நடவடிக்கை !

இலங்கையில் சட்டவிரோதமாக தங்கியிருந்து ஒன்லைன் வேலைகளில் ஈடுபட்டு வந்த 15 வெளிநாட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கொழும்பின் புறநகர் பகுதியான தெஹிவளையில் குடிவரவு திணைக்களத்தின் விசேட புலனாய்வு பிரிவின் அதிகாரிகள் குழுவினால் இவர்கள் நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவர்களில் 11 பேர் இந்திய மற்றும் நேபாளத்தை சேர்ந்தவர்கள் எனத் தெரிய வந்துள்ளது. இவர்கள் அனைவரும் 20 முதல் 30 வயதுக்கு உட்பட்டவர்களாகும்.

குறித்த 11 காலாவதியான விசாவுடன் இலங்கையில் தங்கியிருந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இது தவிர இவர்களில் எஞ்சிய 04 பேர் சுற்றுலா விசாவில் இலங்கைக்கு வந்து வேலையில் ஈடுபட்டுள்ளவர்களாகும்.

கைது செய்யப்பட்டுள்ள 11 வெளிநாட்டவர்களும் மிரிஹான தடுப்பு முகாமுக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளனர்.

அவர்களுக்கு எதிரான நீதிமன்ற விசாரணைகள் நிறைவடைந்ததன் பின்னர் அவர்கள் இலங்கையில் இருந்து நாடு கடத்தப்படவுள்ளனர்.

 

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

நிலந்தவின் பணிநீக்கம் குறித்து கத்தோலிக்க திருச்சபையின் நிலைப்பாடு

அரச புலனாய்வு சேவையின் முன்னாள் பணிப்பாளர் நிலந்த ஜயவர்தனவுக்கு எதிரான ஒழுக்காற்று...

இஸ்ரேல் சபாத் இல்லத்தை அகற்றக்கோரி ஆர்ப்பாட்டம்

பொத்துவில் அறுகம்பை பிரதேசத்தில் அமைக்கப்பட்டுள்ள இஸ்ரேல் நாட்டவர்களால் முன்னெடுத்துச் செல்லப்படும் சபாத்...

கடந்த ஆறு மாதத்தில் அரச வருமானத்தில் ஏற்பட்ட மாற்றம்

2025 ஜனவரி முதல் மே வரையிலான 5 மாத காலப்பகுதியில் அரசாங்கத்தின்...

மஹிந்தானந்த அளுத்கமகே உள்ளிட்டோருக்குப் பிணை

சர்ச்சைக்குரிய கரம் பலகைகள் பரிவர்த்தனை தொடர்பான மற்றொரு வழக்கு தொடர்பாக குற்றப்பத்திரிகை...