தாய்வானில் நேற்று(03) ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் பல இடிந்த நிலையில், 09 பேர் உயிரிழந்ததுடன் 900க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர். அதை தொடர்ந்து இன்று ஜப்பானில் நிலநடுக்கம் ஏற்பட்டது.
இந்நிலையில், தாய்வான், ஜப்பானை தொடர்ந்து சீனாவிலும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. வடமேற்கு சீனாவின் கிங்காய் மாகாணத்தில் 5.5 ரிக்டர் அளவில் ஏற்பட்ட இந்நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் குலுங்கின. காலை 8.39 மணியளவில் ஏற்பட்ட நிலநடுக்கம், 10 கிலோமீற்றர் ஆழத்தில் மையம் கொண்டிருந்ததாக சீன நிலநடுக்கவியல் மையம் தெரிவித்துள்ளது. எனினும், இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதங்கள் குறித்த தகவல் வெளியாகவில்லை.