Date:

காணியைத் துப்புரவு செய்துகொண்டிருந்த மூதாட்டிக்கு அதிர்ச்சி – கருநாகம் தீண்டி உயிரிழப்பு ! தமிழர் பகுதியில் துயரம்

மட்டக்களப்பு, களுவன்கேணி பிரதேசத்தில் கருநாகப்பாம்பு தீண்டியதில் 76 வயதுடைய மூதாட்டியொருவர் உயிரிழந்துள்ளார்.

நேற்றையதினம் இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

சம்பவத்தில் களுவன்கேணி கிராமத்தைச் சேர்ந்த ஏழு பிள்ளைகளின் தாயான சின்னத்தம்பி கற்பகம் என்பவரே உயிரிழந்துள்ளார்.

குறித்த மூதாட்டி தனது வீட்டிற்கருகிலுள்ள காணியைத் துப்புரவு செய்துகொண்டிருந்தவேளை குப்பைக்குள் மறைந்திருந்த கருநாகப்பாம்பு தீண்டிவிட்டதாகத் தெரிவித்த நிலையில் மயங்கி வீழ்ந்துள்ளார்.

இதனையடுத்து அவரை செங்கலடி வைத்தியசாலைக்குக் கொண்டுசென்றவேளை மூதாட்டி உயிரிழந்ததை வைத்தியர்கள் உறுதிசெய்துள்ளனர்.

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

Breaking கட்டார் மீது இஸ்ரேல் தாக்குதல்

சிரேஷ்ட ஹமாஸ் தலைவர்களை குறிவைத்து கட்டார் தலைநகர் தோஹாவில் இஸ்ரேல் தாக்குதல்...

ராஜித சேனாரத்ன பிணையில் விடுதலை

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன இன்று (09) பிணையில்...

மின் கட்டண உயர்வு – பொதுமக்கள் கருத்து

2025 ஆம் ஆண்டின் இறுதி காலாண்டிற்கான இலங்கை மின்சார சபையால் (CEB)...

பாராளுமன்றம்,பிரதமர், அமைச்சரின் வீடுகளை போராட்டக்காரர்கள் கொளுத்தினர்

நேபாளத்தில் அரசுக்கு எதிரான போராட்டம் இரண்டாவது நாளாக நீடித்து வரும் நிலையில்,...