Date:

உயிர்த்த ஞாயிறுத்தாக்குதலுக்கு இந்தியாவே காரணம் : மைத்திரி வாக்குமூலம் !

ஏப்ரல் 21 தாக்குதலின் பிரதான சூத்திரதாரி இலங்கையின் அண்டைய நாடுகளில் ஒன்று என முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன குற்றப்புலனாய்வு திணைக்களத்திடம் தெரிவித்துள்ளதாக உள்ளக தகவல்கள் குறிப்பிடுகின்றன.

2019ஆம் ஆண்டு உயிர்த்த ஞாயிறு தினத்தன்று நடத்தப்பட்ட தாக்குதலின் பின்னணியில் உள்ளவர்கள் குறித்து தாம் அறிந்துள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன கடந்த 22ஆம் திகதி தெரிவித்திருந்தார்.

இதன்படி, குறித்த விடயம் தொடர்பில் கிடைக்கப் பெற்ற முறைப்பாடொன்றுக்கு அமைய, குற்றப்புலனாய்வு திணைக்களத்தினர் அவரிடம் கடந்த 25ஆம் திகதி வாக்குமூலம் பெற்றிருந்தனர்.

இதற்கமைய, அன்றைய தினம் வாக்குமூலம் வழங்கும் போது முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன பல முக்கிய தகவல்களை வெளியிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதன்படி, ஏப்ரல் 21 தாக்குதலின் பிரதான சூத்திரதாரி இலங்கையின் அண்டைய நாடுகளில் ஒன்றென அவர் வாக்குமூலம் வழங்கியுள்ளதாக உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

Breaking News மைத்திரி சி.ஐ.டி.யில் முன்னிலை

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சற்றுமுன்னர் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையாகியுள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தின தாக்குதலுக்கு இன்றுடன் 6 ஆண்டுகள் நிறைவு

உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல் நடத்தப்பட்டு இன்றுடன் 6 ஆண்டுகள் நிறைவடைகிறது.   கடந்த...

சில அமைச்சர் பங்களாக்களில் பெறுமதிமிக்க பகுதிகள் அகற்றம்

சில அமைச்சர் பங்களாக்களில் பெறுமதிமிக்க பகுதிகள் அகற்றப்பட்டுள்ளதாகத் தெரிகிறது என்று பொது...

தற்போது வீதிக்கு இறங்க தயாரா? – கர்தினால் ரஞ்சித்தை சீண்டும் ரணில் தரப்பு

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் இன்று அரசியல் மயப்படுத்தப்பட்டுள்ளன.  தற்போது நீங்கள் வீதிக்கு...

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/newsswqr/public_html/wp-includes/functions.php on line 5373