மெக்சிகோ வழியாக தெற்கு பசிபிக் பெருங்கடலில் அகதிகள் சிலர் படகு மூலம் சென்றபோது திடீரென எழும்பிய இராட்சத அலையால் அந்த படகு கடலில் கவிழ்ந்தது.இதுகுறித்து தகவலறிந்த கடலோர பொலிஸார் அங்கு விரைந்து சென்றனர். பின்னர் கடலில் தத்தளித்து கொண்டிருந்தவர்களை சிலரை மீட்பினும் குறித்த விபத்தில் குழந்தைகள் உட்பட 8 அகதிகள் கடலில் மூழ்கி உயிரிழந்தனர்.
மேலும் சிலர் மாயமாகியுள்ளதால் அவர்களை தேடும் பணியில் மீட்பு படையினர் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.