Date:

லங்கா வைத்தியசாலை : கைக்குண்டை அமைச்சர் வீட்டிலிருந்து கொண்டுவந்ததாக வாக்குமூலம்

நாரஹேன்பிட்டி லங்கா வைத்தியசாலையில் உள்ள கழிவறையில் இருந்து மீட்கப்பட்ட கைக்குண்டை, கொழும்பு – 07 விஜேராம மாவத்தையில் உள்ள அமைச்சர் ஒருவரின் உத்தியோகபூர்வ இலலத்தில் இருந்து தாம் கொண்டுவந்ததாக, கைதுசெய்யப்பட்டவர் வாக்குமூலம் வழங்கியுள்ளார்.

எவ்வாறிருப்பினும், சந்தேகநபரின் வாக்குமூலம் இதுவரையில் உறுதிப்படுத்தப்படவில்லை என, சம்பவம் குறித்து விசாரணைகளை மேற்கொள்ளும் கொழும்பு குற்றவியல் பிரிவு தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், குறித்த விடயம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

நாரஹேன்பிட்டி லங்கா வைத்தியசாலையின் முதலாம் மாடியில் உள்ள கழிவறையில் இருந்து அண்மையில் கைக்குண்டு ஒன்று மீட்கப்பட்டமை தொடர்பில், திருகோணமலை – உப்புவெளி பகுதியை சேர்ந்த 26 வயதுடைய இளைஞர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

தங்கத்தின் விலை அதிகரிப்பு!

உலக சந்தையில் தங்கத்தின் விலை சடுதியாக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகினி்றது. இன்று (12) நிலவரப்படி,...

25,000 ரூபாய் நிவாரணம் கிடைக்கவில்லை : மாணவன் முறைப்பாடு

அரசாங்கத்தினால் வழங்கப்படுகின்ற 25,000 ரூபாய் கொடுப்பனவு, வெள்ளத்தில் சிக்குண்ட தமது வீடு...

கர்ப்பிணி பெண்களுக்கு போஷாக்குக் கொடுப்பனவு!

ஏற்பட்டுள்ள அனர்த்த நிலைமை மற்றும் வரவிருக்கும் பண்டிகைக் காலத்தை முன்னிட்டு கர்ப்பிணி...

தேசிய மக்கள் சக்தி எம்.பி அசோக ரன்வல கைது

முன்னாள் சபாநாயகரும் பாராளுமன்ற உறுப்பினருமான அசோக ரன்வல கைது செய்யப்பட்டுள்ளார். ஆபத்தான முறையில்...