Date:

லங்கா வைத்தியசாலை : கைக்குண்டை அமைச்சர் வீட்டிலிருந்து கொண்டுவந்ததாக வாக்குமூலம்

நாரஹேன்பிட்டி லங்கா வைத்தியசாலையில் உள்ள கழிவறையில் இருந்து மீட்கப்பட்ட கைக்குண்டை, கொழும்பு – 07 விஜேராம மாவத்தையில் உள்ள அமைச்சர் ஒருவரின் உத்தியோகபூர்வ இலலத்தில் இருந்து தாம் கொண்டுவந்ததாக, கைதுசெய்யப்பட்டவர் வாக்குமூலம் வழங்கியுள்ளார்.

எவ்வாறிருப்பினும், சந்தேகநபரின் வாக்குமூலம் இதுவரையில் உறுதிப்படுத்தப்படவில்லை என, சம்பவம் குறித்து விசாரணைகளை மேற்கொள்ளும் கொழும்பு குற்றவியல் பிரிவு தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், குறித்த விடயம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

நாரஹேன்பிட்டி லங்கா வைத்தியசாலையின் முதலாம் மாடியில் உள்ள கழிவறையில் இருந்து அண்மையில் கைக்குண்டு ஒன்று மீட்கப்பட்டமை தொடர்பில், திருகோணமலை – உப்புவெளி பகுதியை சேர்ந்த 26 வயதுடைய இளைஞர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

மோசமான காலநிலை | யாழ் மாவட்டத்திற்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடும்..!

தற்போது உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 650 மில்லிமீற்றருக்கும்...

வெள்ளப் பெருக்கு எச்சரிக்கை விடுப்பு!

வெள்ளப் பெருக்கு ஏற்படுவதற்கான சாத்தியம் குறித்து நீர்ப்பாசனத் திணைக்களம் முன்னெச்சரிக்கை ஒன்றை...

மறு அறிவித்தல் வரை கடலுக்குச் செல்ல வேண்டாம்

இலங்கையின் தென்கிழக்கே வங்காள விரிகுடாவில் நிலைகொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி,...

நாட்டின் பல பகுதிகளில் 100 மிமீ பலத்த மழை!

கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் பொலன்னறுவை, மாத்தளை மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும்...