நாடாளுமன்ற கட்சித் தலைவர்களின் கூட்டம் இன்று இடம்பெறவுள்ளது.
பிற்பகல் 3 மணிக்கு நாடாளுமன்ற கட்டடத் தொகுதியில், சபாநாயகர் மஹிந்த யாபா அபேவர்தன தலைமையில் இந்தக் கூட்டம் நடைபெறவுள்ளது.
நாடாளுமன்ற அமர்வுகளை நடத்தும் தினங்கள் தொடர்பில் இதன்போது தீர்மானிக்கப்படவுள்ளது.
தற்போதைய கொவிட்-19 பரவல் நிலைக்கு மத்தியில், கடந்த நாடாளுமன்ற அமர்வு இரண்டு நாட்களுக்கு மட்டுப்படுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.