Date:

ஆசிரியர்களுக்கு காவல்துறையின் முக்கிய அறிவிப்பு

ன்லைன் முறைமையில் பாடசாலை மாணவர்களுக்கு கற்பித்தலை மேற்கொள்ளும் ஆசிரியர்களுக்கு, எவரேனும் ஒருவரால் ஏதாவதொரு வகையில், குறித்த கற்பித்தல் நடவடிக்கைகளை நிறுத்துமாறு அச்சுறுத்தல் விடுக்கப்படுமாயின் அது தொடர்பில் குற்றப்புலனாய்வு திணைக்களத்துக்கு நேரடியாக முறைப்பாடு செய்யுமாறு காவல்துறை  தலைமையகம் அறிவித்தலொன்றை விடுத்துள்ளனர்.

அவ்வாறே, குறித்த ஆசிரியர்கள் அவசியம் ஏற்படின் 119 காவல்துறை அவசர அழைப்புப் பிரிவுக்கும் இது தொடர்பில் அறிவிக்க முடியும் என அந்த அறிவித்தலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, இவ்வாறான முறைப்பாடுகள் தெடர்பில் தாமதிக்காமல், சரியான முறையில், மிகவும் கடுமையான சட்டநடவடிக்கை எடுக்குமாறு காவல்துறை அதிபர் மற்றும் குற்றப்புலனாய்வு திணைக்களத்துக்கு பொறுப்பான பிரதி காவல்துறைமா அதிபருக்கு பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

இன்று இரவு தோன்றும் ‘சூப்பர் மூன்’

இந்த ஆண்டின் முதல் 'சூப்பர் மூன்' நிகழ்வு இன்று இரவு வானில்...

எதிர் வரும் நாட்களில் அதிகரிக்கும் மழை

இலங்கைக்கு கிழக்காக ஒரு கீழ் வளிமண்டலத் தளம்பல் நிலை உருவாகி வருவதால்,...

கொழும்பில் தீடீர் நீர் வெட்டு

அம்பத்தலையிலிருந்து தெஹிவளைக்கு நீர் விநியோகிக்கும் பிரதான நீர் விநியோகக் குழாயில் ஏற்பட்ட...

அனைவருக்கும் வசதியளிக்கும் வகையில் கிராமசேவகர் பிரிவுகளில் புதிய நடைமுறை!

நாட்டில் உள்ள கிராமசேவகர் பிரிவுகளில் மக்களுக்கு மிகவும் அவசியமான விண்ணப்பப் படிவங்களை...