Date:

இஸ்ரோவின் புதிய சாதனை !

 

 

 

 

இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ, மறுபயன்பாட்டு ரொக்கெட்டை உருவாக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. அதாவது, விண்ணில் செலுத்தக்கூடிய ரொக்கெட்டை பூமியில் தரையிறக்கி மீண்டும் பயன்படுத்துவதற்கான தொழில்நுட்ப சோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன. மறுபயன்பாட்டு ரொக்கெட்டின் (RLV) தரையிறங்கும் திறனை நிரூபிப்பதற்காக கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் கர்நாடக மாநிலம், சித்ரதுர்கா மாவட்டத்திலுள்ள ஏரோனாட்டிக்கல் சோதனை தளத்தில் இருந்து சோதனை செய்யப்பட்டது.

அப்போது நிர்ணயிக்கப்பட்ட ஓடுபாதையில் மாதிரி ரொக்கெட் (RLV-LEX-01) வெற்றிகரமாக தரையிறங்கியது. அதன் தொடர்ச்சியாக இன்று காலையில் அதே சோதனை தளத்தில் இருந்து மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்பத்துடன் இரண்டாவது கட்ட சோதனை மேற்கொள்ளப்பட்டது. இந்த பரிசோதனையின் மூலம் மறுபயன்பாட்டு செலுத்து வாகன தொழில்நுட்பத்தில் ஒரு முக்கிய மைல்கல்லை எட்டியுள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக இஸ்ரோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

புஷ்பக் என பெயரிடப்பட்டுள்ள இறக்கையுடன் கூடிய இந்த மாதிரி ரொக்கெட் (RLV-LEX-02), விமானப்படையின் சினூக் ஹெலிகொப்டர் மூலம் உயரே கொண்டு செல்லப்பட்டு, 4.5 கிலோ மீற்றர் உயரத்தில் இருந்து விடுவிக்கப்பட்டது. 4 கிலோ மீற்றர் தொலைவில் இருந்தபோது தானாக ஓடுபாதையை அணுகிய புஷ்பக், துல்லியமாக ஓடுபாதையில் தரையிறங்கியது. பின்னர் அதன் பிரேக் பாராசூட், லேண்டிங் கியர் பிரேக்குகள் மற்றும் முன்பக்க ஸ்டியரிங் வீல் ஆகியவற்றை பயன்படுத்தி ஓடுதளத்தில் நிறுத்தப்பட்டது.

மறுபயன்பாட்டு ரொக்கெட்டின் (RLV) தானியங்கி தரையிறங்கும் திறனை RLV-LEX-02 நிரூபித்துள்ளது. விண்வெளியில் இருந்து திரும்பும் மறுபயன்பாட்டு ரொக்கெட்டின் அணுகுமுறை மற்றும் அதிவேகத்தில் தரையிறங்கும் நிலைமைகளை, இன்றைய பரிசோதனை தெளிவுபடுத்தியிருக்கிறது. இவ்வாறு இஸ்ரோ தெரிவித்துள்ளது.

மிகவும் சவாலான இந்த திட்டத்தை சிறிய குறையும் இல்லாமல் செயல்படுத்திய விஞ்ஞானிகளை இஸ்ரோ தலைவர் சோம்நாத் பாராட்டியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

விடைபெறும் லசித் மலிங்க!

இலங்கை கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சு ஆலோசகராக லசித் மலிங்கவின் ஒப்பந்தம்...

நுவரெலியாவில் குவியும் சுற்றுலா பயணிகள்

நுவரெலியாவில் நிலவும் மாறுபட்ட காலநிலை காரணமாகவும் ஞாயிறு வார விடுமுறை என்பதாலும்...

பங்களாதேஷை T20 உலகக்கிண்ணத்திலிருந்து நீக்கிய ICC!

பாதுகாப்பு காரணங்களுக்காக இந்தியா செல்லப்போவதில்லை என பங்களாதேஷ் முடிவெடுத்ததைத் தொடர்ந்து, 2026...

83வது தேசிய மல்யுத்த சாம்பியன்ஷிப்பில் வரலாற்று இரட்டை வெற்றியை வென்ற இலங்கை விமானப்படை!

83வது தேசிய மல்யுத்த சாம்பியன்ஷிப் 2025, கொழும்பு சுகததாச உள்ளக அரங்கில்...