Date:

அனுரகுமாரவை சந்தித்த இலங்கைக்கான ஜப்பானிய தூதுவர் !

 

 

இலங்கைக்கான ஜப்பானிய தூதுவர் மிசுகோஷி ஹிடேகி மற்றும் மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் .அனுரகுமார திஸாநாயக்க ஆகியோருக்கு இடையிலான சந்திப்பொன்று நேற்று (19 ) இடம்பெற்றுள்ளது.

இச்சந்திப்பில் ஜப்பானிய தூதரகத்தின் பிரதித் தலைவர் கட்சுகி கோட்டாரோ மற்றும் இரண்டாவது செயலாளர் இமாய் கௌரி மற்றும் மக்கள் விடுதலை முன்னணியின் தேசிய செயற்குழு உறுப்பினர் விஜித ஹேரத் ஆகியோர் கலந்துகொண்டனர்.

 

இலங்கையின் தற்போதைய பொருளாதார, அரசியல் நிலவரங்கள் குறித்து இரு தரப்பிலும் விரிவாக கலந்துரையாடப்பட்டதுடன், எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டது.

 

மக்கள் விடுதலை முன்னணியின் நிலைப்பாடு குறித்தும் ஜப்பானிய இராஜதந்திர பிரதிநிதிகளுக்கு விளக்கமளிக்கப்பட்டது. இலங்கையில் முதலீடு செய்வதற்கு ஜப்பான் தயாராக இருப்பதை ஜப்பானிய பிரதிநிதிகள் வலியுறுத்தியதாக தெரிவிக்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

Breaking கட்டார் மீது இஸ்ரேல் தாக்குதல்

சிரேஷ்ட ஹமாஸ் தலைவர்களை குறிவைத்து கட்டார் தலைநகர் தோஹாவில் இஸ்ரேல் தாக்குதல்...

ராஜித சேனாரத்ன பிணையில் விடுதலை

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன இன்று (09) பிணையில்...

மின் கட்டண உயர்வு – பொதுமக்கள் கருத்து

2025 ஆம் ஆண்டின் இறுதி காலாண்டிற்கான இலங்கை மின்சார சபையால் (CEB)...

பாராளுமன்றம்,பிரதமர், அமைச்சரின் வீடுகளை போராட்டக்காரர்கள் கொளுத்தினர்

நேபாளத்தில் அரசுக்கு எதிரான போராட்டம் இரண்டாவது நாளாக நீடித்து வரும் நிலையில்,...