Date:

குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு 10 கிலோ அரிசி !

 

 

குறைந்த வருமானம் பெரும் குடும்பங்களுக்காக நிவாரணத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் கொடுத்துள்ளது.

2003ம் ஆண்டின் முதல்பாதியில் சமுர்த்தி பயனாளிகள் உட்பட 25 மாவட்டங்களில் உள்ள 2.74 மில்லியன் குடும்பங்களில், ஒரு குடும்பத்திற்கு 10 கிலோகிராம் நாட்டு அரிசி வீதம் இரண்டு மாதங்களுக்கு அரிசி வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.

அடையாளம் காணப்பட்ட குறைந்த வருமானம் பெறுவோரின் போசாக்கு மட்டத்தை மேம்படுத்துவதற்கு உதவுவதற்காக இந்த வருடம் இந்த திட்டத்தை நடைமுறைப் படுத்துவது சரியானது என அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

அதன்படி மாவட்ட செயலாளர்களால் அடையாளம் காணப்பட்ட சுமார் 2.74 மில்லியன் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு மாதாந்தம் 10 கிலோகிராம் அரிசி வழங்கும் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு ஜனாதிபதியால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

இலங்கைக்கு விசா இல்லாத நுழையக்கூடிய நாடுகள்

இலங்கையின் சுற்றுலாத் துறையை மேம்படுத்தும் நோக்கில், அரசாங்கம் மேலும் 33 நாடுகளுக்கு...

ஜனாதிபதி பொதுமன்னிப்பு: சிறை கைதிக்கு கடூழிய சிறை

ஜனாதிபதி பொது மன்னிப்பின் கீழ் அநுராதபுரம் சிறைச்சாலையிலிருந்து சட்டவிரோதமாக விடுவிக்கப்பட்ட டபிள்யூ.எம்....

நாட்டின் 219 மருந்தகங்களுக்கு உரிமம் இரத்து – அமைச்சர் அறிவிப்பு

2025 ஜூலை 18 வரையிலான காலப்பகுதியில், நாட்டில் உள்ள 219 மருந்தகங்களின்...

IMF நிதி வசதி குறித்த ஐந்தாவது மதிப்பாய்வு செப்டம்பரில்

இலங்கைக்கு வழங்கப்படும் விரிவாக்கப்பட்ட நிதி வசதி (EFF) திட்டத்தின் ஐந்தாவது மதிப்பாய்வு...